அரசு நெருக்குதல்: ஆடி அமாவாசை தர்ப்பணத்தை தவிர்க்கும் புரோஹிதர்கள்!

thiruvedagam
thiruvedagam

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவேடகம் சோழவந்தான் படித்துறைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என்பதால், அதனைத் தவிர்க்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா 3- வது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, ஆடி மாதம் 18 ஆடிப் பெருக்கு வைபவம், ஆடி வெள்ளிக் கிழமைகள், ஆடி அமாவாசை என இவற்றைக் குறிவைத்து, இந்துப் பண்டிகைகளை கொண்டாட விடாமல் அரசு தடை செய்துள்ளது.

இதனால், இந்த ஆண்டு ஆடி அமாவாசை தர்ப்பணம் ஆற்றுப் படுகையில் செய்வது தவிர்க்கப் படும் என்று திருவேடகம் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.

வருடா வருடம், ஆடி அமாவாசை, அன்று மக்கள் இறந்த முன்னோர்களான பித்ருக்களை நினைத்து புனித நீராடி கடல் மற்றும் ஆற்று படுகையில் பித்ரு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரானா பரவல் ஊரடங்கு மற்றும், போலீஸ் துறையின் அராஜக நடவடிக்கைகள் காரணமாக, மதுரை பேச்சியம்மன் படித்துறை, திருப்புவனம், திருவேடகம், சோழவந்தான் உள்ளிட்ட வைகை கரையோர சுற்று வட்டார பகுதிகளில் தர்ப்பணம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று, அந்த கிராம தலைமை புரோகிதர்களாலும் கிராம பொது மக்களாலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

thiruvedagam2
thiruvedagam2

கடந்த முறை ஆற்றுப் படுகையில் கூடிய ஹிந்து ஆன்மிக அன்பர்களின் நெருக்குதல் காரணமாக தர்ப்பணம் செய்ய உதவியாக முன்வந்த புரோஹிதர்களை துரத்தித் துரத்தி லத்தியால் அடித்து விரட்டி, போலீசார் கடும் சாபங்களை வாங்கிக் கொண்டனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

கடந்த வருடம் இதே போல் தடை விதித்து நெருக்குதல் கொடுத்து அடித்து விரட்டிய ஸ்ரீரங்கம் போலீசார் முன் அதிமுக., அரசுக்கு தர்ப்பணம் செய்துவிட்டதாக சிலர் ஆற்றாமையாலும் ஆத்திரத்துடனும் சாபம் விட்டனர். இந்நிலையில் அதிமுக., அரசு போய் திமுக., அரசு வந்திருக்கிறது. அதுவும் இது போன்ற நெருக்கடி கொடுத்து, முன்னோர்களுக்கான கடமையைச் செய்ய விடாமல் தடுப்பதால், இதற்கும் தர்ப்பணம் செய்வோம் என்று சிலர் சமூகத் தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories