valikappu
valikappu

ஈத்தாமொழி காவல் நிலையத்தில் பெண் காவலர் அங்கு பணிபுரியும் பெண் போலீசாருக்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அந்த வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடங்களில் காவல் நிலையத்தில் விஜயா என்ற முதல் நிலை காவலர் பணி புரிந்து வருகிறார். இவரது வளைகாப்பு விழாவை காவல்நிலையத்தில் வைத்து நடத்த அங்குள்ள பெண் காவலர்கள் தீர்மானித்தனர்.

இதனை அடுத்து அனைத்து வகையான இனிப்புகள், பழங்கள் போன்றவற்றை வாங்கி காவல்நிலையத்தில் முதல் நிலை பெண் காவலர் விஜயாவுக்கு ஒவ்வொரு பெண் காவலரும் கண்ணத்தில் மஞ்சள், சந்தனம் போன்றவற்றை பூசி கோலாகலமாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஈத்தாமொழி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கீதா தலைமை வகித்தார். பெண் காவலர் ஒருவருக்கு காவல் நிலையத்திலேயே பணிபுரியும் சக பெண் காவலர்கள் அதிகாரிகள் வளைகாப்பு நடத்திய சம்பவம் அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending