December 6, 2025, 9:00 AM
26.8 C
Chennai

கவர்னர் மாளிகையில் கோழிக்கறி விருந்துண்ண வந்த கரடி! வைரல் வீடியோ!

bear 3
bear 3

சிக்கிம் மாநில கவர்னர் மாளிகையில் இமாலயக் கருப்புக் கரடி ஒன்று புகுந்து கோழிக்கறி சாப்பிடதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிக்கிம் மாநில கவர்னராக இருப்பவர் கங்கா பிரசாத் சௌராஸியா. நேற்று அங்கே கவர்னர் மாளிகையில் இரவு இமாலயப் பிரதேச கருப்புக் கரடி ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னர் மாளிகையின் ஊழியர்கள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த கிச்சனில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டுள்ளது. கரடி புகுந்த தகவல் அறிந்ததும் உடனடியாக வனச்சரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருட்டில் கரடியை பிடிப்பது கடினம் என்பதால் விடிந்த பிறகு கரடியைப் பிடிப்பது என்பது முடிவு செய்யப்பட்டது. அதனால் வனத்துறை காவலர்கள் விடியும் வரை ஆளுநர் மாளிகையைச் சுற்றி கரடி உள்ளே புகாமல் காவல் காத்தனர்.

விடிந்த பிறகு கரடி பிடிக்கக் களத்தில் இறங்கிய வனக்காவலர்கள் மதியம் வரை போராடி பதுங்கியிருந்த கரடியை பிடித்தனர். பயந்து போய் நீர் குழாயில் பதுங்கியிருந்த கரடியை துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.

bear 1 1
bear 1 1

கரடியைப் பிடித்தது குறித்து பகிர்ந்த வனச்சரகத்தினர், ‘இரவு முழுவதும் கவர்னர் மாளிகைக்குள் கரடி புகுந்துவிடாதவாறு காவல் காத்தோம். காலை முழுவதும் கரடியை வலைவீசித் தேடினோம். மதியம் வரை தேடியபிறகுதான் கரடி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

நீர் வெளியேறும் குழாயில் கரடி பதுங்கியிருந்தது. அதை அடுத்து கரடிக்கு துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தினோம். முதல் ஊசி குறிதப்பியதை அடுத்து இரண்டாவது ஊசி செலுத்தி கரடியைப் பிடித்தோம். பிடிக்கப்பட்ட கரடியைத் தற்போது பங்கலகா வனவிலங்கு சரணாலயத்தில் விடவிருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இமாலயக் கருப்புக் கரடிகள் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories