திருமணத்திற்கு விருந்துண்ண வந்த விருந்தாளியால் மக்கள் அதிர்ச்சி!

Published:

bear
bear

மெக்சிகோவில் திருமண நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக வந்த கரடியால் மக்கள் அச்சம் அடைந்தனர்

மெக்சிகோவின் வடகிழக்கில் Nuevo Leon என்ற பகுதியில் Chipinque என்னும் சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிலையில், Chipinque பூங்காவிற்கு எதிர்பாராத விதமாக கரடி ஒன்று வந்தது. மேலும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை கீழே தள்ளி அவற்றின் மீது ஏறி சிறிது நேரம் அட்டூழியம் செய்தது.

இதனை தொடர்ந்து, மேஜைகளின் மீது உணவு ஏதும் இருக்கிறதா என்று தேடியுள்ளது. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர், பானைகளின் உதவியோடு ஒலி எழுப்பி கரடியை விரட்ட முயற்சித்தனர்.

ஆனால், உணவு ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரடி தானாகவே அங்கிருந்து வெளியேறியது. இந்த சம்பவத்தால் விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் அச்சம் அடைந்தனர்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img