இவற்றை இணையத்தில் ‌பெறலாம்: வருமானவரித்துறை!

income-tax
income-tax

வருமான வரி செலுத்துவோருக்கு இணைய தளத்திலேயே பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி, வரி செலுத்தும் இணையதளத்தில் ஆண்டுவரி செலுத்தும் விவரத்தை (ஏஐஎஸ்) இனி வரி செலுத்துவோர் பெற முடியும். அத்துடன் கூடுதலாக வட்டி மூலமாக பெறப்பட்ட தொகை, டிவிடெண்ட், பங்குபத்திர முதலீடு, பரஸ்பர நிதி பரிவர்த்தனை, வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட தொகைஉள்ளிட்ட விவரங்களையும் இணையதளம் மூலம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை தங்களது வருமான வரி ரிட்டர்னில் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை கூறியிருந்தது.

வரி செலுத்துவோர் தங்களது 26 ஏஎஸ் படிவத்தில், பரஸ்பர நிதி முதலீடு, வெளிநாட்டிலிருந்து தங்கள் வங்கிக் கணக்குக்கு வந்த தொகை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

படிவம் 26 ஏஎஸ் என்பது ஆண்டு முழுவதிலும் வரி செலுத்துவோர் மேற்கொண்ட முதலீடு விவரங்களை உள்ளடக்கியது.

இந்த விவரங்களை வருமான வரித்துறை இணையதளத்திலிருந்து வரி செலுத்துவோர் தங்களுக்குத் தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

ஏஐஎஸ் விவரமானது எளிதில் பெறக்கூடியது. இந்த விவரங்களை இணையதளத்திலிருந்து பெற முடியும். இது பிடிஎப், சிஎஸ்பி, ஐஎஸ்என் உள்ளிட்ட படிவங்களில் பெறலாம்.

இதற்கு ஏஐஎஸ் பகுதிக்குச் சென்று சர்வீஸ் மெனுவை அழுத்தினால் பெறலாம் என்று வருமான வரித்துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவோர் அதுபற்றிய விவரங்களை தெரிவிப்பதோடு வரி படிவத்தில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் அதையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க முடியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories