பக்தர்களின் குபேர கிரிவலத்தை கருத்தாகத் தடுத்த விடியல் அரசு!

Published:

IMG 20211202 WA0029 - 2026

இன்று குபேர கிரிவல நாள் என்பதால், கிரிவலம் செல்ல பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கொரோனா தொற்றால், குபேர கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இன்று ஒரு நாள் மட்டும் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை குபேர கிரிவலம் வர பக்தர்கள் முயன்றனர் . அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் பக்தர்கள் வருவதை தடுக்க தடுப்புகள் அமைத்து பக்தர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

Related articles

Recent articles

spot_img