April 27, 2025, 10:49 PM
30.2 C
Chennai

கோவில் பூட்டை திறந்து திறந்து பார்த்தும் முடியல… பறந்து போன திருடன்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள நடுவிக்கோட்டை ஊராட்சியில் நாடியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மிகவும் பழமையானதும், அக்கிராமத்திற்கு சொந்தமான கோயிலாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மிகச் சிறப்பான முறையில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இக்கோயிலுக்கு ஏராளமானோர் குலதெய்வமாக இருப்பதால், வெளிநாடு, மாவட்டத்திற்கு வேலைக்காரணமாக சென்றவர்கள், விழாக்காலங்கள் மட்டுமில்லாமல், தினந்தோறும் கூட்டமாக வந்து, தரிசனம் செய்வார்கள்.

இதனால் இக்கோயில் அப்பகுதியில் பிரபலமான கோயிலாகும்.அதிக கூட்டம் வருவதால், உண்டியலில் அதிக அளவில் வருமானமம் உள்ளதால், இது வரை மூன்று முறை மர்மநபர்கள் கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

இது பற்றி அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள. போலீசாரும் வந்து விசாரணை செய்து விட்டு, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் சென்று விடுவார்கள்.

திருட்டு குறித்து போலீசாரிடம் கேட்டால், திருடன் கிடைத்தால் விசாரணை செய்கின்றோம் என்று கூறி அனுப்பி விடுவார்கள். இதனால் கிராம மக்களும் வேறு வழியின்றி விட்டு விடுவார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம்!

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் முக கவசம் அணிந்து இரும்பு கடப்பாரை போல் உள்ளதை வைத்து கொண்டு கோயில் கருவறையின் பூட்டை உடைக்க 1 மணிநேரமாக முயற்சித்துள்ளார்.

அப்போது பல முறை பலவிதமான முறையில் முயற்சிப்பார். ஆனால் நிலைதடுமாறி கீழே விழும் நிலைக்கு சென்றும், கருவறையில் பூட்டை உடைப்பதில் குறியாக மர்மநபர் இருப்பார். ஆனால் பல முறை முயற்சித்தும் உடைக்க முடியாததால், விட்டு விட்டு சென்று விடுவார்.

இந்த சம்பவ காட்சிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மீண்டும் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுபற்றி இந்த கிராமத்து மக்கள் கூறுகையில், இக்கோயிலுக்கு சொந்தமானவர்கள், வெளிநாடு, மாவட்டத்தில் இருப்பதால், அதிக வருமானமும், விலை அதிக உள்ள பொருட்களும் உள்ளன.

இதனையறிந்த மர்மநபர்கள், அடிக்கடி இக்கோயிலில் திருட்டு சம்பவம் நடைபெறுகின்றது. தற்போது நடந்த கொள்ளை முயற்சியை சிசிடிவி காட்சிகளோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் இதுவரை மனு ரசீது கூட வழங்கவில்லை.

ALSO READ:  ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கொள்ளையர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரின் அலட்சியத்தால், கோயில் நகைகள், உண்டியல்கள் மற்றும் விலை அதிகமாக உள்ள பொருட்கள் பெரிய அளவில் கொள்ளை நடந்து போய் விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.

எனவே உடனடியாக உயரதிகாரிகள் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

Topics

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

Entertainment News

Popular Categories