December 6, 2025, 9:10 PM
25.6 C
Chennai

சீனியர் சிட்டிசன்ஸ் ஆன்லைன் ரேடியோ! முதியோர் முயற்சிக்கு வரவேற்பு!

senior citizens redio - 2025

கோயம்புத்தூரில் மூத்த குடிமக்கள் இணைந்து ஆன்லைன் ரேடியோ நடத்தி வருகின்றனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாவட்டம், மாதம்பட்டி பகுதியில் தபோவனம் என்ற இடத்தில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 250க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகளில் தங்கி இருக்கும் முதியவர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் ரேடியோவை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு மூத்த குடிமக்களும் தங்களால் முடிந்த செயல்களை செய்து வருகின்றனர். அதன்படி கதை சொல்வது, கர்நாடக இசை அமைப்பது, பாட்டு பாடுவது, பதிவு செய்தவற்றை எடிட்டிங் செய்வது என்று ஒவ்வொரு வேலையையும் செய்து வருகின்றனர்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் இந்த ஆன்லைன் ரேடியோவில் சொல்லப்பட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்வார்கள்.

அவர்கள் கூறும் கதைகள் அவர்கள் கற்றுக் கொடுக்கும் பழக்கவழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றை கேட்டு வளர்வார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர்.

ஏனெனில் திருமணமான பிறகு தனி குடும்பம் என்று வந்துவிடுவதால் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு என்பது கிடைக்காத ஒன்றாக மாறிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் குழந்தைகளை பிரிந்து தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கும் இதுபோன்ற ரேடியோக்களில் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்துவது அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories