December 6, 2025, 1:04 AM
26 C
Chennai

வலிமை: எதற்கும் தயாராக இருப்பார் அஜித்: இயக்குனர் எச் வினோத்!

vinod
vinod

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களுமே கவனம் ஈர்த்துள்ளது. 2022 பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது.

படத்திற்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ள நிலையில் இயக்குநர் ஹெச். வினோத் அளித்தப் பேட்டியியில் அஜித்துடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுதான் நான் எழுதிய இரண்டாவது கதை. இது வேறொரு ஹீரோவுக்காக எழுதியது. இந்தக் கதையின் வேறொரு வடிவத்தை நான் முதலில் எழுதியிருந்தேன்.

ajith 3 - 2025

அப்போது அது ஒரு போலீஸ் கதையாக இருக்கவில்லை. இன்று நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் பார்க்கிறோம்.

இன்று இருக்கும் இளைஞர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்க்கிறோம். அதுபோன்ற இரண்டு பிரச்சினைகளை நான் எடுத்துக் கொண்டேன்.

அந்தப் பிரச்சினைகள் ஹீரோவின் குடும்பத்தில் ஏற்பட்டால் என்னவாகும்? அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் அந்தக் கதை.

இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை ஒரு புதிய கதையாக மாற்றியிருக்கிறேன். என்னுடைய பக்கத்திலிருந்து நான் எந்தவித சமரசமும் செய்யவில்லை.

என்னைப் போன்ற இயக்குநர்கள் ஒரு பெரிய ஸ்டாருடன் பணியாற்றும்போது பார்வையாளர்களுக்காக எடுக்கும் படத்தில் போடும் உழைப்பில் 10 சதவீதத்தைக் கொடுத்தால் போதும். ஒரு பெரிய நடிகரின் படத்தை ரசிகர்களே கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து விடுவார்கள்”.

ajith 1 - 2025

அஜித்தைப் பொறுத்தவரை இயக்குநர் அவரிடமிருந்து ஒரு விஷயம் வேண்டுமென்று நினைத்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்.

எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு அவர் தயாராக இருப்பார்.

அவரது கதாபாத்திரத்தை எப்படி வேண்டுமானாலும் எழுதக்கூடிய சுதந்திரத்தையும் அவர் கொடுப்பார். இந்தப் படத்துக்காக அவர் முடிந்த அளவு ஃபிட்டாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன்

அதில், ”வலிமை’ படத்தில் அஜித் சார் ஒரு குடும்பத்தின் மகனாக நடிப்பதால், அவரது தலைமுடியை கருப்பு நிறத்திலேயே வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் கதைக்காக புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்.

படத்தில் அவரது கதாபாத்திரம் புத்திசாலித்தனமானது; நுட்பமானது.’வலிமை’ கதையை முதலில் எழுதும்போது ஹீமா குரேஷியின் கதாபாத்திரத்தை காதல் கதாபாத்திரமாகத்தான் எழுதினேன்.

பின்பு, கொரோனா சூழலில் கதை மாற்றப்பட்டதால் விசாரணை அதிகாரியாக அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்’ என்றவர், ‘

அஜித் 61′ படத்தின் அப்டேட்டையும் பகிர்ந்துகொண்டுள்ளார். ‘அடுத்தப்படத்தில் அஜித் சாருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் குறைவாகவும் வசனங்கள் அதிகம் பேசும்படியும் காட்சிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’

உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி அப்படம் பேசும்”.
என உற்சாகமுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories