சென்னையில் திரும்பிய திசையெல்லாம் செஸ்தம்பி வரவேற்பு..

1735564 chess - 2026

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளநிலையில் சென்னையில் திரும்பிய திசையெல்லாம் செஸ்தம்பி வரவேற்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது

இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டி நடைபெற இன்னும் சில தினங்களே இருப்பதால் மாநிலம் முழுவதும் செஸ் ஜூரம் தொற்றிக் கொண்டு உள்ளது. மக்களின் பார்வை இந்தப் போட்டியின் மீதே அதிகமாக இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக அனைத்து வகையிலான விழிப்புணர்வு ஏற்பாடுகளையும் தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (மஸ்கட்) ‘தம்பி’ ஆகும். தம்பி என்ற பெயரில் வேட்டி, சட்டை அணிந்த செங்குதிரை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைவரையும் செல்பி எடுத்துக் கொள்ள தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தம்பி என்கிற குதிரை சிலை சென்னையின் முக்கிய இடங்களில் காட்சி அளிக்கிறது. தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம், நேரு ஸ்டேடியம், நேரு பார்க், சென்ட்ரல், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையம், மெரினா கடற்கரை, தலைமை செயலகம், உத்தண்டி, கிழக்கு கடற்கரை சாலை (2), ஒ.எம்.ஆர். சாலை (3), போட்டி நடைபெறும் மாமல்லபுரம் பகுதி (4) உள்பட 21 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல்- விமான நிலையம் இடையே இயக்கப்படும் ஒரு மெட்ரோ ரெயிலிலும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. “நம்ம செஸ், நம்ம பெருமை” என்ற வாசகத்துடன் தம்பி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தவிர எழிலகம், ஒமந்தூர் அரசினர் தோட்டம், எழும்பூர் அருங்காட்சியகம், நேரு ஸ்டேடியம் உள்பட 15 இடங்களில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறித்த ராட்சத பலூன் தொங்க விடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. சென்னை நேப்பியர் பாலத்தில் கருப்பு-வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள செஸ் கட்டங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. நாள்தோறும் ஏராளமானவர்கள் அங்கு சென்று செல்பி, வீடியோ எடுத்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

Entertainment News

Popular Categories