சென்னையில் திரும்பிய திசையெல்லாம் செஸ்தம்பி வரவேற்பு..

1735564 chess - 2026

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளநிலையில் சென்னையில் திரும்பிய திசையெல்லாம் செஸ்தம்பி வரவேற்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது

இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டி நடைபெற இன்னும் சில தினங்களே இருப்பதால் மாநிலம் முழுவதும் செஸ் ஜூரம் தொற்றிக் கொண்டு உள்ளது. மக்களின் பார்வை இந்தப் போட்டியின் மீதே அதிகமாக இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக அனைத்து வகையிலான விழிப்புணர்வு ஏற்பாடுகளையும் தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (மஸ்கட்) ‘தம்பி’ ஆகும். தம்பி என்ற பெயரில் வேட்டி, சட்டை அணிந்த செங்குதிரை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைவரையும் செல்பி எடுத்துக் கொள்ள தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தம்பி என்கிற குதிரை சிலை சென்னையின் முக்கிய இடங்களில் காட்சி அளிக்கிறது. தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம், நேரு ஸ்டேடியம், நேரு பார்க், சென்ட்ரல், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையம், மெரினா கடற்கரை, தலைமை செயலகம், உத்தண்டி, கிழக்கு கடற்கரை சாலை (2), ஒ.எம்.ஆர். சாலை (3), போட்டி நடைபெறும் மாமல்லபுரம் பகுதி (4) உள்பட 21 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல்- விமான நிலையம் இடையே இயக்கப்படும் ஒரு மெட்ரோ ரெயிலிலும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. “நம்ம செஸ், நம்ம பெருமை” என்ற வாசகத்துடன் தம்பி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தவிர எழிலகம், ஒமந்தூர் அரசினர் தோட்டம், எழும்பூர் அருங்காட்சியகம், நேரு ஸ்டேடியம் உள்பட 15 இடங்களில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறித்த ராட்சத பலூன் தொங்க விடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. சென்னை நேப்பியர் பாலத்தில் கருப்பு-வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள செஸ் கட்டங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. நாள்தோறும் ஏராளமானவர்கள் அங்கு சென்று செல்பி, வீடியோ எடுத்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories