December 12, 2025, 2:20 AM
23.7 C
Chennai

சென்னையில் திரும்பிய திசையெல்லாம் செஸ்தம்பி வரவேற்பு..

1735564 chess - 2025

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளநிலையில் சென்னையில் திரும்பிய திசையெல்லாம் செஸ்தம்பி வரவேற்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது

இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டி நடைபெற இன்னும் சில தினங்களே இருப்பதால் மாநிலம் முழுவதும் செஸ் ஜூரம் தொற்றிக் கொண்டு உள்ளது. மக்களின் பார்வை இந்தப் போட்டியின் மீதே அதிகமாக இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக அனைத்து வகையிலான விழிப்புணர்வு ஏற்பாடுகளையும் தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (மஸ்கட்) ‘தம்பி’ ஆகும். தம்பி என்ற பெயரில் வேட்டி, சட்டை அணிந்த செங்குதிரை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைவரையும் செல்பி எடுத்துக் கொள்ள தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தம்பி என்கிற குதிரை சிலை சென்னையின் முக்கிய இடங்களில் காட்சி அளிக்கிறது. தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம், நேரு ஸ்டேடியம், நேரு பார்க், சென்ட்ரல், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையம், மெரினா கடற்கரை, தலைமை செயலகம், உத்தண்டி, கிழக்கு கடற்கரை சாலை (2), ஒ.எம்.ஆர். சாலை (3), போட்டி நடைபெறும் மாமல்லபுரம் பகுதி (4) உள்பட 21 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல்- விமான நிலையம் இடையே இயக்கப்படும் ஒரு மெட்ரோ ரெயிலிலும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. “நம்ம செஸ், நம்ம பெருமை” என்ற வாசகத்துடன் தம்பி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தவிர எழிலகம், ஒமந்தூர் அரசினர் தோட்டம், எழும்பூர் அருங்காட்சியகம், நேரு ஸ்டேடியம் உள்பட 15 இடங்களில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறித்த ராட்சத பலூன் தொங்க விடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. சென்னை நேப்பியர் பாலத்தில் கருப்பு-வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள செஸ் கட்டங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. நாள்தோறும் ஏராளமானவர்கள் அங்கு சென்று செல்பி, வீடியோ எடுத்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

Topics

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

Entertainment News

Popular Categories