மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை மாற்றம்-மம்தா

மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை நாளை மறுநாள் புதன்கிழமை மாற்றியமைக்கப்பட உள்ளதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று அறிவித்து உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது உதவியாளரான ஆர்பிதா முகர்ஜியிடம் இருந்து ரூ.50கோடிக்கும் மேற்பட்ட பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

மேற்கு வங்காள அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், மந்திரி மற்றும் கட்சி பதவிகளில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி முற்றிலும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு வங்காள மந்திரி சபை முற்றிலும் கலைக்கப்பட்டு புதிய மந்திரி சபை அமைக்கப்படும் என பலரும் பலவிதத்தில் செய்தியாக எழுதி வருகின்றனர். ஆனால், அப்படி எதுவும் எங்களிடம் திட்டம் இல்லை. ஆம். மந்திரி சபையில் மாற்றம் இருக்கும். சுப்ரதா முகர்ஜி, சதன் பாண்டே ஆகிய மந்திரிகளை கட்சி இழந்து விட்டது. பார்த்தா சாட்டர்ஜி சிறையில் உள்ளார். அதனால், அவர்கள் அனைவரின் பணியையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவற்றை தனியாக என்னால் கவனிப்பது என்பது சாத்தியமற்றது என கூறியுள்ளார்.

அதனால், மந்திரி சபை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட உள்ளது. 4 முதல் 5 பேர் புதுமுகங்களாக இடம்பெற வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார். இதற்கு முன்பு வங்காளத்தில் 23 மாவட்டங்கள் இருந்தன. சுந்தர்பன், இச்சிமதி, ராணாகாட், பிஷ்ணுபூர், ஜாங்கிபூர், பெஹ்ராம்பூர் மற்றும் ஒரு மாவட்டம் கூடுதலாக இடம் பெற உள்ளது. இதனால், கூடுதலாக 7 மாவட்டங்களை சேர்த்து மொத்த எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்க உள்ளது என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறியுள்ளார்.

801051 wcanc - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories