அதிமுக கட்சி குழப்பத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை- வானதி சீனிவாசன்

Published:

அதிமுக கட்சி குழப்பத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை குடியரசுத் தலைவர் வேட்பாளர் காகவே அக்கூட்டத்திற்கு சென்றேன் என ஸ்ரீவில்லிபுத்தூரில் பிஜேபி தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் வியாழக்கிழமை விளக்கம் கூறியுள்ளார் கூட்டணி குறித்த கேள்விக்கு மலுப்புலான பதிலளித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது 5g ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து திமுக எம்பி ராஜா வெளியிட்ட அறிக்கைக்கு குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம் என்றும் கடந்த எட்டு வருட காலங்களில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டிற்கும் பிஜேபி இதுவரை ஆளாகவில்லை என்றும் தமிழக திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டனர் என்றார்…

அதிமுகவில் நடக்கும் அதிகார சண்டை குறித்த கேள்விக்கு அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை என்றும் அதில் எப்போதும் பிஜேபி தலையிட போவதில்லை என்றும் தெரிவித்தார்..

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதாவை முன்னிலைப்படுத்தி கூட்டம் நடைபெற்றது என்ற கேள்விக்கு நானும் சட்டமன்ற கட்சி குழு தலைவரும் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி மும்மூக்கு ஆதரவு கேட்டு அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் இதைத் தாண்டி அதில் வேறு ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன் உள்ள பெரியார் சிலையை எடுக்க வேண்டும் என்று கனல் கண்ணன் கூறிய கருத்திற்கு பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்த நிலையில் உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு அதை தற்போது தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கடவுள் நிந்தனை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றும் கூறினார்.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தற்போதைய விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும்,தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக என்ற கேள்விக்கு கூட்டணி கொடுத்த விஷயங்களை தேசிய குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

IMG 20220804 WA0135 - 2026

மேலும் அமலாக்க துறையை பாரதிய ஜனதா கட்சி தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறது என காங்கிரசின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கையில் காங்கிரஸ் கட்சி தான் அனைத்து குறைகள் எழுதும் ஈடுபட்டு வருவதாகவும் ஆகையால் அவர்கள் சொல்ல அருகதை இல்லை என்றும் தெரிவித்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img