December 6, 2025, 10:02 AM
26.8 C
Chennai

கண் விழிக்குள் தேசியக்கொடி கோவை நகை தொழிலாளி சாதனை..

811040 untitled 2 - 2025

இளைஞர்கள் நமது தேசத்தையும், தேசியக் கொடியையும் கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த நகை தொழிலாளி வரைந்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த ராஜா என்ற நகை தொழிலாளி தனது கண் விழியில் தேசியக் கொடி வரைந்து சாதனை படைத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள், தியாகிகளை கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்திற்கு புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவேன். இந்த ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இளைஞர்கள் நமது தேசத்தையும், தேசிய கொடியையும் கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி வரையும் முயற்சியில் இறங்கினேன். அதன்படி முட்டையின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும், முட்டை ஓட்டிற்கும் இடையே காணப்படும் மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளேன். இவ்வாறு செய்வதால் கண் விழிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.

இந்த சிறிய அளவிலான தேசியக் கொடியை கண்ணுக்குள் பொருத்துவது மிகவும் கடினம். கொடி மிகவும் மெல்லியதாக உள்ளதால் கண்ணுக்குள் பொருத்தும் போது கண்களை வேகமாக சிமிட்டினாலோ அல்லது கண்களில் இருந்து நீர் வடிந்தாலோ கொடி கரைந்து விடும். இதனால் பல மணி நேர முயற்சிக்கு பின் வெற்றிகரமாக இந்த கொடியை நான் 2 கண்களுக்குள் பொருத்தி உள்ளேன். மேலும் 300 மில்லி கிராம் தங்கத்தை தீக்குச்சி அளவை விட சிறியதாக தங்கத்தை பயன்படுத்தி ஒரு வீட்டின் அருகே இளைஞர் ஒருவர் தேசிய கொடியை தாங்கி நிற்பது போல வடிவமைத்துள்ளேன். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நாம் தேசத்தையும், தேசத்திற்காக பாடுபட்டவர்களையும் போற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories