பெண் எஸ்.பி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு முக்கிய ஆவணங்கள் மாயம்..

Published:

500x300 1748516 court - 2026

பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது முக்கிய ஆவணங்கள் மாயமானதால் விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாயமான ஆவணங்களின் நகலை வருகிற 25-ந் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை. ஆனால் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களாக சேர்க்கப்பட்ட விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பரனூர் ஆகிய சுங்கச்சாவடியை சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் நேரில் வந்து சாட்சியம் அளித்தனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். இதற்கிடையில் பெண் போலீஸ் அதிகாரி சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.-பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் ஆடியோ உரையாடல், வாட்ஸ்-அப் மெசேஜ் ஆகியவை திடீரென மாயமாகி இருந்தது. இதனை அறிந்த நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். மாயமான ஆவணங்களின் நகலை வருகிற 25-ந் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது முக்கிய ஆவணங்கள் மாயமானதால் விழுப்புரம் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img