மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

Published:

sabarimala nata thirappu - 2026

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளதால், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். 26 ஆம் ஆம் தேதிக்கு 30,000, 27-ஆம் தேதிக்கு 35,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு வெளியிடப்பட்டது
டிசம்பர் 26&27 மண்டல பூஜையின் ஒரு பகுதியாக, டிசம்பர் 26 மற்றும் 27 முதல் மெய்நிகர்-வரிசை வலைத்தளம் மூலம் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வலைத்தள இணைப்பு https://sabarimalaonline.org
இதில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.

சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து மதியம் மற்றும் இரவில் கோவில் நடை திறந்திருக்கும் நேரம் 45 நிமிடங்கள் நீட்டிப்பு செய்து திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதன்படி மதியம், 1:00 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை, 1:30 மணி வரையும், இரவில், 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதற்கு பதிலாக, 11:15 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

கோவிலின், 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு, 80 பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள, 45 நிமிடங்களில் கூடுதலாக, 3,500 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலங்களில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டு, தினமும் சுமார் 18.45 மணி நேரம் நடை திறந்திருக்கும். அதாவது அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மீண்டும் மதியம் 3 மணி முதல் இரவு 11.15 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மண்டல, மகரவிளக்கு காலங்களில், நெய் அபிஷேகம் மற்றும் பிற பூஜைகளுக்குப் பிறகும் தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது.

ஆன்லைன் முன்பதிவு இல்லாதவர்களும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசிக்க வசதி உள்ளது.

சபரிமலை மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணி முதல் டிசம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளுக்கான சபரிமலை மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணி முதல் தொடங்கியுள்ளது. தரிசனத்திற்கான இடங்கள் sabarimalaonline.org என்ற வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

டிசம்பர் 26 ஆம் தேதி 30,000 பேரும், டிசம்பர் 27 ஆம் தேதி 35,000 பேரும் மெய்நிகர் வரிசை மூலம் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த நாட்களில் ஒவ்வொன்றிலும் ஐந்தாயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img