சிவகாசி தாலுகா சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம்..

IMG 20221101 WA0126 - 2026

சிவகாசி தாலுகா அலுவலக சர்வேயர் பிரிவில்
புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்தது வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள்
மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அதிமுக ஆதரவு பணியாளர்களை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி்க்கை எழுந்துள்ளது.

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு இயங்கி வருகின்றது. இங்கு வீட்டுமனை பட்டா, நில பட்டா, பட்டா பெயர் மாற்றம் பெற தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பட்டா பெறுவதற்கு, பத்திரத்தின் நகல், மூலப்பத்திரம், வில்லங்கச்சான்று, வீட்டுவரி ரசீது, நிலமாக இருந்தால் நிலவரி ரசீது ஆகியவற்றை ஸ்கேன் செய்து, தாலுகா அலுவலகத்தின் வாயிலாக, பொது இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் சாதாரண நடுத்தர பொதுமக்கள் எளிதாக பட்டா பெற முடியாத நிலை இருக்கின்றது. பட்டா பெறுவதற்கு, மக்களும் விவசாயிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். .பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்துக்கு செல்வோர், இ-சேவை மையத்தில், சுயமாக விண்ணப்பிப்பதற்கு முயற்சிப்பவர்கள் என்று யாராக இருந்தாலும், அவர்கள் புரோக்கர்களின் மூலம் சென்றால் எளிதாக பட்டா வாங்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகின்றது. குறிப்பாக இந்த சர்வேயர் பிரிவில் பணிபுரியும் சில பணியாளர்கள் 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது ஆட்சியாளர்களால் ஆசியோடு வந்தவர்கள். எனவே இப்போதும் அதிமுக புரோக்கர்களின் ஆதிக்கமே நீடிக்கின்றது. சர்வேயர் பிரிவில் அதிமுக வேஷ்டி கட்டிய புரோக்கர்களை அதிகமாக காணமுடிகின்றது. இந்த புரோக்கர்களை பிடித்தால் மட்டுமே எளிதாக பட்டா வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்கள், அதிமுக ஆதரவு ஊழியர்களை அடையாளம் கண்டு உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒரு வீட்டு மனை வாங்கினால், அதற்குப் பட்டா மாற்றம் பெற முடியவில்லை. குடும்பச் சொத்தைப் பாகப்பிரிவினை செய்தாலும் உரியவர்களுக்கு முறையாகப் பட்டா கிடைப்பதில்லை. சர்வேயர் பிரிவில் புரோக்கர்களுக்கு மட்டுமே வேலை நடக்கின்றது. பட்டா பெற முடியாமல் 20திற்கும் மேற்பட்ட மக்கள் என்னிடமே புகார் தெரிவித்துள்ளனர். பட்டா கேட்டு தினமும் 50திற்கும் மேற்பட்டோர் சிவகாசி சர்வேயர் பிரிவிற்கு வருடக்கணக்கில் அலைந்து வருகின்றனர். பொதுமக்களை அலக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பூவநாதபுரம், திருத்தங்கல் கண்ணகி காலனி் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை அரசின் கிராம நிர்வாக கணக்கில் சேர்க்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் மின் இணைப்பு, ரேசன் கார்டு உட்பட பல்வேறு அரசின் திட்டங்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சிவகாசி பகுதி மக்களுக்கு புரோக்கர்கள் தலையீடு இன்றி எளிதாக பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories