வட மாநில தொழிலாளரிடம் ரூ ஒரு லட்சம் ஆட்டைய போட்ட கில்லாடி..

Published:

Tamil News large 324476620230217180921 - 2026

சீர்காழியில் தங்கி அரிவாள் அடிக்கும் வட மாநில தொழிலாளர்களிடம் ஒரு லட்சம் ஆட்டைய போட்ட கில்லாடி மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சீர்காழி அருகே தென்பாதியில் வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை ஓரத்தில் தங்கி அருவாள் அடிப்பவர்களிடம்  ஒரு லட்சம் ரூபாய் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சீர்காழி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென்பாதி மெயின் ரோடு ஓரத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மேத்தா மகன் வினோத்( 30) இவருடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் சாலை ஓரத்தில் கூடாரம் அமைத்து கடந்த ஐந்து தினங்களாக தங்கி அருவாள், அருவாள்மனை, கத்தி, கோடாரி, தறி, பாறை போன்ற பொருட்களை பொதுமக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் அவர் அவர்களின் கண்முன்னே செய்து கொடுத்து குறைந்த விலையில் விற்று வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு அனைவரும் கூடாரத்தில் குடும்பத்துடன் தூங்கி உள்ளனர் அப்பொழுது  வினோத் தலைமாட்டில் பணப் பையை வைத்து தூங்கி கொண்டிருந்தபோது நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஒரு லட்சம் ரொக்க பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர் காலையில் எழுந்து பார்த்தபோது பணப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

இதுகுறித்து சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img