கர்நாடகா-வீதிக்கு வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் பிரச்சினை..

946893 - 2026

கர்நாடகா மாநிலத்தில் ஐஏஎஸ் ரோகிணி, ஐபிஎஸ் ரூபா இருவரும் ஒருவரை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டி வரும் நிலையில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கர்நாடகா முதல்வர் பொம்மை நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நிலையில் ரோகிணி ரூபா இருவரும் ஒருவரை ஒருவர் தலைமை செயலரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரிக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் முற்றியுள்ளது.

gallerye 050848519 3247516 - 2026

ரூபா தன் முகநுால் பதிவில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை ரோகிணி அழித்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அறநிலையத் துறை கமிஷனராக இருப்பவர் ரோகிணி சிந்துாரி(39). இவர், நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்திருந்தாலும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர்.

கோலாரில் கலெக்டராக பணியாற்றிய, ஐஏஎஸ் அதிகாரி ரவி, 2015ல் தற்கொலை செய்தார். ரோகிணி உடனான காதல் விவகாரத்தில் தான் அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ரோகிணி மறுத்தார்.
இந்நிலையில், இவர் மீது ஐபிஎஸ்  அதிகாரி ரூபா 19 குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

gallerye 050842586 3247516 - 2026

இதில், ரவி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்தார் எனவும் குற்றஞ்சாட்டி படங்கள் சிலவற்றையும் நேற்று முன்தினம் வெளியிட்டார்.இதையடுத்து, ரூபா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ரோகிணி கூறினார்.

இந்நிலையில், ரோகிணியின் அந்தரங்க படங்களை வெளியிட்டது தொடர்பாக, ரூபா மீது ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி, பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில் திங்கள்கிழமை புகார் செய்தார்.
ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து ரோகிணியிடம் கேட்ட போது, ரூபா விரைவில் குணம் அடைய வாழ்த்துகள் என்றார்.

இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரூபா, நேற்று தன் முகநுால் பதிவில், ‘நான் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரோகிணி கூறி உள்ளார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை அழித்தது பற்றி ஏதாவது கூறினாரா. சவாலை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை. தன் கணவர் மூலம், என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பெண் அதிகாரிகள் மோதலால், அரசுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இருவரிடமும் விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்ப, முதல்வர் பசவராஜ் பொம்மை, தலைமை செயலர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார்.இந்த பரபரப்பான சூழலில், நேற்று பெங்களூரு விதான் சவுதாவுக்கு சென்ற ரோகிணி சிந்துாரி, தலைமை செயலர் வந்திதா சர்மாவை சந்தித்து, ரூபா மீது புகார் கடிதம் கொடுத்துள்ளார்.

இது பற்றி ரோகிணி கூறுகையில், என் மீது ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஆதாரமற்றவை. என் மீது உள்ள தனிப்பட்ட பகை காரணமாக இப்படி செய்கிறார்.

இதுகுறித்து தலைமை செயலரிடம், விளக்கம் அளித்து உள்ளேன் என்றார்.அவர் சென்ற சிறிது நேரத்தில், விதான் சவுதாவுக்கு வந்த ரூபாவும், தலைமை செயலரை சந்தித்து, 35 நிமிடங்கள் பேசினார். ரோகிணி மீது ஏழு குற்றச்சாட்டுகள் அடங்கிய மூன்று பக்க புகார் மனுவை அளித்தார்.

பின் அவர் கூறுகையில் ரோகிணி சிந்துாரி மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அவர் செய்த தவறுக்கு தண்டனை வேண்டும் என்று தான் கேட்கிறேன்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, 15 நாட்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினேன்.அந்த தகவலை அவர்கள், அரசிடம் கொண்டு போகவில்லை. அவரை பாதுகாக்கும் முயற்சி நடக்கிறது. என் புகார் மீது கண்டிப்பாக விசாரணை நடைபெற வேண்டும். ரோகிணியால் என்னை போல் பல பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்தும், தலைமை செயலர் வந்திதா சர்மாவிடம் கூறி உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories