மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு ஓர் எளிய யோசனை…!

m k stalin dmk - 2026

எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில் இருந்து அரசியலில் பேசப்பட்டு வரும் தி.மு.க.,வின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், எவ்வளவோ முயன்றும் மாநிலத்தின் முதல்வராக வர இயலாமல் தவிக்கிறார்.

89ஆம் வருடம் மு.கருணாநிதி முதல்வராக வந்தாலும், அல்ப நாட்களில் ஆட்சி இழக்க வேண்டியதாயிற்று. பின்னர் ஜெயலலிதா ஊழல்களைச் செய்து அவப்பெயர் பெற்ற போதும், ஜெயலலிதா வீட்டு ஜோடிச் செருப்புகளையும் அவர் செய்த வளர்ப்பு மகன் திருமணம், அப்போது அணிந்திருந்த தங்க நகைகள் பட்டுப் புடைவைகள் என குடும்ப தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் சாதனை ஒளிபரப்பாகக் காட்டி 96 தேர்தலில் திமுக., ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் அப்போது கருணாநிதி முதல்வர் ஆனார்.

தொடர்ந்து 2006ம் வருடம் அதே போன்ற தவறுகளால் ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளி கருணாநிதி மீண்டும் முதல்வர் அரியணை ஏறினார். இடைப்பட்ட காலத்தில் ஸ்டாலின் சென்னை நகர மேயர், துணை முதல்வர் என்றெல்லாம் பதவிகளை வகித்த போதும், தமிழக முதல்வர் கனவு மட்டும் நடக்கவே இல்லை. கடந்த 2016ம் வருட சட்டமன்றத் தேர்தலில் திமுக., வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று கூறப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட குடும்பச் சண்டைகளில் கட்சி அல்லாடியது.

சென்னை, மதுரை என கட்சியின் அதிகாரம் தலை எடுக்க, அதனைக் களை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் கருணாநிதி. அவரிடம் அப்போது செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். ஸ்டாலின் முதல்வர் ஆவாரா என்று கேட்டபோது, தாமாக ஒரு கருத்தைச் சொன்னார் கருணாநிதி. எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றார்.

அப்போதும் வாய்ப்பு நழுவிப் போனது ஸ்டாலினுக்கு. ஆனால் தற்போது மு.கருணாநிதி செயல் இழந்தவராய், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப, செயல் தலைவர் ஆகியுள்ள ஸ்டாலினுக்கு வாய்ப்பு வரக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வந்தன. ஆனால், அதுவும் நிறைவேறவில்லை.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு யோசனை கூறுவதாக, அதுவும் எளிய பரிகாரமாக மக்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தக் கருத்து….

எம்.எல்.ஏ.,வே ஆகாத நாராயண சாமி முதல்வர் ஆயிட்டார்

மெஜாரிடியே இல்லாத பழனி சாமி முதல்வர் ஆயிட்டார்

38 எம்.எல்.ஏவை வெச்சிருக்கிற குமார சாமி முதல்வர் ஆவப்போறார்

ஆனா 40 வருசமா முயற்சி செய்தாலும் … ம்ஹும்… முடியல

அதுக்கு ஒரே ஒரு மாற்றம் செய்தாலே போதும்… அதுவும் பேர்ல…! ஆமா… இன்று முதல் உங்கள் பெயரை மு.க.ஸ்டாலின்சாமி என்று வைத்துக் கொண்டால் போதும்… முதல்வர் நாற்காலி தேடி ஓடி வரும்.

சாமி இல்ல சாமி இல்லன்னு சொல்லாதீங்கடான்னா.. கேக்குறீங்களா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories