திட்டாம அடிக்காம குணமா வாயில சொல்லணும்..! வைரலான வீடியோ! சுட்டிப் பெண்ணின் சுவாரஸ்ய பின்னணி!

smithika praveena prakash - 2026

அண்மைக் காலமாக ஒரு வீடியோ பதிவு பலரது வாட்ஸ்அப் எண்களிலும் பார்வர்ட் செய்யப் பட்டது. பேஸ்புக் டைம்லைனை நிரப்பியது. டிவிட்டரில் அவரவரும் அதைப் பதிவிட்டு, குழந்தையின் மழலையை ரசித்து சிலாகித்தனர்.

அப்படி என்ன அந்த வீடியோவில்.? தாயிடம் திட்டு வாங்கிக் கொண்டு, அழுது கொண்டே பேசும் அந்தக் குழந்தை, தன்னை அடிக்காமல், திட்டாமல், குணமாக வாயால் சொல்லணும் என்று கெஞ்சுவது பலரது மனத்தையும் உருக்கியது என்றே சொல்லலாம்! யார் அந்த சுட்டிக் குழந்தை?

திட்டாமல் அடிக்காமல் குணமாய் சொல்லனும் என கொஞ்சும் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி… யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று எல்லோருமே சீரியஸாக யோசித்துக் கொண்டுதான் இருந்தனர். தொடர்ந்து, அந்த சிறுமியின் மற்ற டிக் டாக் மியூசிக்கலி வீடியோக்கள், சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. சரி… குணமா வாயில சொல்லு என்று கொஞ்சும் மழலைக் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய இந்த சிறுமி யார்?

அந்தச் சிறுமியின் பெயர் ஸ்மித்திகா. திருப்பூர் மண்ணரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் – பிரவீணா தம்பதியினரின் ஒரே மகள். ஸ்மித்திகா தன் தாயிடம் அடிக்காமல், திட்டாமல் குணமா வாயில சொல்லணும் என்று கெஞ்சும் அந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர் வீட்டுக்கு வந்து குழந்தையிடம் பேசிவிட்டுச் செல்வதாகக் கூறுகிறார் பிரவீணா.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

தன் பின்னணி குறித்து குறிப்பிடும் பிரவீணா, தனக்கு மதுரை அருகே உள்ள திருமங்கலம்தான் சொந்த ஊர் என்றும், சிறிய வயதிலேயே திருப்பூருக்கு குடி வந்ததாகவும் கூறினார்.

பள்ளிக்கு கொண்டு சென்ற சிற்றுண்டியை ஸ்மித்திகா, சாப்பிடாமல் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்ததற்காக அவரது தாய் பிரவீணா லேசாக அடித்துக் கேட்ட போதுதான், அடிக்காமல் குணமாக சொல்ல வேண்டும் என்று ஸ்மித்திகா கூறியுள்ளார். அப்போது எடுத்த வீடியோவை சிறுமியின் தந்தையான பிரகாஷின் நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர, அனைத்து ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.

ஸ்மித்திகா மிகவும் சுட்டியான பெண் என்பதால் அவள் செய்யும் குறும்புகளை வீடியோ எடுத்து அவரது தந்தையிடம் காட்டியதாகவும், அது இவ்வளவு தூரம் பிரபலமடையும் என எதிர்பார்க்கவில்லை என்றும் ஸ்மித்திகாவின் தாய் பிரவீணா கூறினார்.

தன்னை இவ்வளவு தூரம் பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி எனக் கூறிய சுட்டிக் குழந்தை ஸ்மித்திகாவின் மற்ற பல டிக்டாக் மியூசிக்கலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. கொஞ்சும் மொழி பேசிய ஸ்மித்திகாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories