December 5, 2025, 9:37 PM
26.6 C
Chennai

திட்டாம அடிக்காம குணமா வாயில சொல்லணும்..! வைரலான வீடியோ! சுட்டிப் பெண்ணின் சுவாரஸ்ய பின்னணி!

smithika praveena prakash - 2025

அண்மைக் காலமாக ஒரு வீடியோ பதிவு பலரது வாட்ஸ்அப் எண்களிலும் பார்வர்ட் செய்யப் பட்டது. பேஸ்புக் டைம்லைனை நிரப்பியது. டிவிட்டரில் அவரவரும் அதைப் பதிவிட்டு, குழந்தையின் மழலையை ரசித்து சிலாகித்தனர்.

அப்படி என்ன அந்த வீடியோவில்.? தாயிடம் திட்டு வாங்கிக் கொண்டு, அழுது கொண்டே பேசும் அந்தக் குழந்தை, தன்னை அடிக்காமல், திட்டாமல், குணமாக வாயால் சொல்லணும் என்று கெஞ்சுவது பலரது மனத்தையும் உருக்கியது என்றே சொல்லலாம்! யார் அந்த சுட்டிக் குழந்தை?

திட்டாமல் அடிக்காமல் குணமாய் சொல்லனும் என கொஞ்சும் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி… யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று எல்லோருமே சீரியஸாக யோசித்துக் கொண்டுதான் இருந்தனர். தொடர்ந்து, அந்த சிறுமியின் மற்ற டிக் டாக் மியூசிக்கலி வீடியோக்கள், சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. சரி… குணமா வாயில சொல்லு என்று கொஞ்சும் மழலைக் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய இந்த சிறுமி யார்?

அந்தச் சிறுமியின் பெயர் ஸ்மித்திகா. திருப்பூர் மண்ணரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் – பிரவீணா தம்பதியினரின் ஒரே மகள். ஸ்மித்திகா தன் தாயிடம் அடிக்காமல், திட்டாமல் குணமா வாயில சொல்லணும் என்று கெஞ்சும் அந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர் வீட்டுக்கு வந்து குழந்தையிடம் பேசிவிட்டுச் செல்வதாகக் கூறுகிறார் பிரவீணா.

தன் பின்னணி குறித்து குறிப்பிடும் பிரவீணா, தனக்கு மதுரை அருகே உள்ள திருமங்கலம்தான் சொந்த ஊர் என்றும், சிறிய வயதிலேயே திருப்பூருக்கு குடி வந்ததாகவும் கூறினார்.

பள்ளிக்கு கொண்டு சென்ற சிற்றுண்டியை ஸ்மித்திகா, சாப்பிடாமல் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்ததற்காக அவரது தாய் பிரவீணா லேசாக அடித்துக் கேட்ட போதுதான், அடிக்காமல் குணமாக சொல்ல வேண்டும் என்று ஸ்மித்திகா கூறியுள்ளார். அப்போது எடுத்த வீடியோவை சிறுமியின் தந்தையான பிரகாஷின் நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர, அனைத்து ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.

ஸ்மித்திகா மிகவும் சுட்டியான பெண் என்பதால் அவள் செய்யும் குறும்புகளை வீடியோ எடுத்து அவரது தந்தையிடம் காட்டியதாகவும், அது இவ்வளவு தூரம் பிரபலமடையும் என எதிர்பார்க்கவில்லை என்றும் ஸ்மித்திகாவின் தாய் பிரவீணா கூறினார்.

தன்னை இவ்வளவு தூரம் பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி எனக் கூறிய சுட்டிக் குழந்தை ஸ்மித்திகாவின் மற்ற பல டிக்டாக் மியூசிக்கலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. கொஞ்சும் மொழி பேசிய ஸ்மித்திகாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories