December 5, 2025, 5:18 PM
27.9 C
Chennai

இலங்கை… வரலாறு காணாத ரகளை! சபாநாயகர் மீது மிளகாய்ப் பொடி வீசி… தாங்கள் யார் என்பதைக் காட்டிய ராஜபட்ச ஆதரவாளர்கள்!

rajapaksha parliament2 - 2025

இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றாவது நாளாக அமளி துமளி ஏற்பட்டது. சபாநாயகர் மீது ராஜபட்ச எம்.பிக்கள் மிளகாய் பொடி வீசி தாங்கள் யார் என்பதைக் காட்டினார்கள். இலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீசப்பட்ட நிலையில் ராஜபட்சவுக்கு எதிராக மற்றொரு நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் நிறைவேறியது.

இலங்கையில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க அதிபர் சிறீசேன மறுத்து விட்டார்.

இந்நிலையில் மூன்றாவது நாளாக வெள்ளிக் கிழமை நேற்று மதியம் இலங்கை நாடாளுமன்றம் கூடிய போது, சபாநாயகர் கரு ஜெயசூரியா வரலாறு காணாத அளவில் நூற்றுக் கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் வந்தார். அப்போது ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்களுக்கும் ரணில் விக்ரமசிங்க ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.

திடீரென சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்ற ராஜபட்ச எம்.பிக்கள் மிளகாய்ப் பொடியை தூக்கி வீசினர். இந்த கூச்சல் குழப்பத்துக்கு நடுவே ராஜபட்ச மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதில் தீர்மானம் வெற்றி பெற்றதாகவும், நாடாளுமன்றம் மீண்டும் 19-ஆம் தேதி கூடும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிகழ்வுகள், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப் பட்டன. எம்,.பி.க்கள் அடிதடி ரகளையில் ஈடுபடுவதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டவர்கள், 18 வயசுக்கு குறைந்தவர்கள் பெண்கள் / இதய நோய் உள்ளவர்கள் இந்த வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் / என்று கேட்டுக் கொண்டனர்.

மகிந்த ராஜபட்சவின் கட்சி எம்பிக்களின் செயல் இது. நாடாளுமன்றமே இப்படியென்றால் நாடு கிடைத்தால்? மக்களின் வரிப்பணம் / குங்குமம் மிஞ்சினா குருக்கள் குன்டில தடவுவானாம்! என்று கிண்டல் அடித்தார்கள்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற சபாநாயகரின் அரியாசனத்தை மிளகாய் மகிந்தா ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய் பொடி கொண்டு சுத்தம் செய்யும் வேளை… என்று சொல்லி இந்த வீடியோக்களைப் பகிர்ந்தனர்…


இலங்கை நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த புதிய குத்து சண்டை காட்சிகள் வைளியீடு காணத்தவறாதீர்கள் என்று சொல்லி, குத்துச் சண்டைக் காட்சிகளுக்கான பின்னணிக் குரலுடன், வீடியோ பதிவிட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories