பாரம்பரிய ரயிலில் பயணிப்போம் வாங்க… நெல்லை தூத்துக்குடி மக்களே!

IMG 20181118 WA0022 - 2026

‘இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்’ எனும் பயணத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயின் ரயில் சேவையாக ரயில் பயணிகளை மகிழ்விக்க உலகிலேயே பழைமையான நீராவி இன்ஜின்மூலம் திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் இடையே ஹெரிடேஜ் ரயில் இயக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில், கடந்த 1855-ல் ஈஸ்ட் இண்டியன் கம்பெனியின் கிட்சன் தாம்சன் மற்றும் ஹெவிட்சன் ஆகியோரால் ஈ.ஐ.ஆர்., 21 என்ற நீராவி இன்ஜின் தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்தியாவில் நீராவி இன்ஜின்மூலம் ரயில்கள் இயக்கப்பட்டன. இங்கிலாந்து விக்டோரியா மகாராணி, நீராவி இன்ஜின் ரயில்களில் இந்தியாவில் பயணம்செய்தார். இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் சேவையில் நீராவி இன்ஜின் ஈடுபடுத்தப்பட்டது.

அதன்பிறகு, பயணிகள் சேவையை நிறைவுசெய்த நீராவி இன்ஜின் ஹவுரா மற்றும் ஜமால்பூர் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த 1964-ம் ஆண்டுக்குப் பிறகு, எந்த ரயில்வே வழித்தடத்திலும் இயக்கப்படவில்லை.
இந்திய ரயில்வே, இந்த இன்ஜின்களைக் கடந்த 2014-ம் ஆண்டு குடியரசு, சுதந்திர தினங்களில் பயணிகளைக் கவரும் வகையிலும், பாரம்பர்யத்தைப் பேணும் வகையிலும் குறிப்பிட்ட தூரம் மட்டும் இயக்கப்பட்டது.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!
IMG 20181118 WA0021 - 2026

பின்னர், தெற்கு ரயில்வே கடந்த 2010-ம் ஆண்டு சென்னை, பெரம்பூர் ரயில்வே பணிமனையில் நிறுத்திப் பராமரித்தது. அதன் பின்னர், தெற்கு ரயில்வே சார்பில் ‘பாரம்பரிய சேவை’ என்ற பெயரில், குறிப்பிட்ட ஊர்களில் நீராவி இன்ஜின்மூலம் ஒரு பெட்டியுடன் இயக்கப்பட்டன. இதில், 35 பேர் பயணிக்கும் வகையில் ஏ.சி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்’ எனும் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் இடையே இயக்கிட முடிவுசெய்யப்பட்டு, கடந்த நவம்பர் 9-ம் தேதி திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த ஹெரிடேஜ் ரயில், இன்று 35 பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டத்திற்கு இயக்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஷா கொடியைத்து இயக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட இந்த நீராவி இன்ஜின், கடந்த 1857ல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது. அதன்பிறகு இந்த இன்ஜின், ஹவுரா மற்றும் ஜமால்பூரில் நிறுத்தப்பட்டது. அங்கு, இந்த இன்ஜின் ரயிலின் பாகங்கள் காணாமல் போனதால் சிதிலமடைந்தது. இந்த நீராவி இன்ஜின், பழைமையைப் போற்றும் வகையில் அதை 2010ம் ஆண்டு பெரம்பூர் பணிமனைக்குக் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது.
பராமரிக்கப்பட்ட நீராவி இன்ஜின்மூலம் எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே 10 கி.மீ தூரத்திற்கு இயக்கப்பட்டது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
IMG 20181118 WA0020 - 2026

அதன்பிறகு, புதுச்சேரி – சின்னபாபுசமுத்திரம் இடையே 17 கி.மீ வரை இயக்கப்பட்டது. தற்போது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் இடையே 33 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படுகிறது. வரும் 21-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு நாள்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார். ரயில் கிளம்பும்போது பயணிகள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்..

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories