மன உளைச்சல் என்று சொல்பவன் போலீஸ்காரனே இல்லை: பொன் மாணிக்கவேல் பகீர்!

pon manikkavel - 2026
File picture

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் சிலர் பொன் மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டினர். தங்களை பொய்யான வகையில் குறிப்பிட்ட சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கட்டாயப் படுத்தியதாகவும் தங்களுக்கு மன உளைச்சல் கொடுப்பதாகவும் டிஜிபியிடம் காவல்துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர்

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து  செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார்…

தம் மீது புகார் கூறிய 21 பேரும் கடந்த 400 நாட்களில் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியபோது….

என் மீது புகார் கூறிய 21 பேரும் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை 

என் மீது புகார் கூறிய 21 பேரும் ஒரு நபரை கூட கைது செய்யவில்லை 

என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

4 காவலர்களை பயன்படுத்தி 47 பேரை கைது செய்துள்ளேன்

எனக்கு வழங்கப்பட்ட டி.எஸ்.பிக்கள், ஏ.டி.எஸ்.பிக்கள் மூலமாக நான் இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பணி மாற்றம் கேட்டு என்னை யாரும் அணுகவில்லை

பணி மாறுதல் கேட்டு மின்னஞ்சல் மூலமாக கூட யாரும் என்னை அணுகவில்லை 

6 மாத பணிக்காலம் முடிந்த பிறகு மூன்று பேர் மட்டுமே தங்களை விடுவிக்கக் கோரினர் 

வழக்கின் நிலை அறிக்கையை கொடுத்துவிட்டு செல்வதாக இருந்தால் யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது

அவதூறாகப் பேசுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது என்பதெல்லாம் பழங்கால குற்றச்சாட்டு

எனக்கு எதிராக யாரும் திரும்புவதாக கருதவில்லை, ஆனாலும் தனி ஆளாக போராடுகிறேன் 

கடமைகளை செய்து கொடுக்காமல் யாரையும் பணியில் இருந்து விடுவிக்க முடியாது 

எனக்கு எதிரான வழக்கில் பின்னடைவு ஏற்பட்டதால் பிரச்னை கொடுக்கிறார்கள் 

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நாங்கள் தான் பதிவு செய்கிறோம்

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

என்னுடன் பணியாற்ற விரும்புபவர்களை வைத்து தொடர்ந்து பணியாற்றுவேன்

அடிப்படை ஆதாரம் இல்லாமல் நான் எப்ஐஆர் போடச் சொல்வதாக கூறியவர்களுக்கு அடிப்படை சட்ட அறிவு இல்லை

மாற்று அதிகாரிகளை கொடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு ஒரே வாரத்தில் 10 மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன்

மன உளைச்சல் என்று கூறும் காவல் அதிகாரி போலீஸ் வேலைக்கு தகுதியற்றவர் 

பணியில் மன உளைச்சல் என்று கூறுபவர் போலீசே இல்லை

மூன்று பேர் இருந்தால் கூட போதும், நான் தொடர்ந்து பணியாற்றுவேன் 

நல்ல எண்ணங்களும், நல்ல ஆன்மிகமும் தான் என்னை ஆட்டிப்படைக்கிறது …

-என்று கூறினார் பொன் மாணிக்கவேல்

2 COMMENTS

  1. இவர் சொல்வது முற்றிலும் ஞாயமாகத்தானிருக்கு, ஏனெனில் இவர் ஒரு உண்மையான காவல்துறை அதிகாரி என்பதற்கு, ஏகப்பட்ட உதாரணங்களிருக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories