December 6, 2025, 4:12 PM
29.4 C
Chennai

ஆதரவற்றுக் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்! குவியும் பாராட்டு!

ladypolice inhyderbad - 2025

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அப்சல்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இர்பான் என்பவர் நின்றிருந்தார். அவரிடம் அங்கே போதையில் வந்த பெண், தன் கையில் இருந்த குழந்தையைக் கொடுத்து, சற்று பார்த்துக் கொள்ளுங்கள், நான் பாத்ரூம் சென்றுவருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

வெகுநேரம் ஆகியும் அந்தப் பெண் வரவில்லை. இந்நிலையில் அந்த இரண்டு மாதக் குழந்தை பசி தாங்காமல் அழத் தொடங்கியது. புட்டிப்பால் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார் இர்பான். ஆனால், முடியவில்லை. இதனால் அவர் அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்றார்.

குழந்தையின் தவிப்பையும் பசியையும் உணர்ந்த ஏட்டு ரவீந்திரன், மகப்பேறு முடிந்து பிரசவ விடுமுறையில் வீட்டில் இருக்கும் தனது மனைவி பிரியங்காவிடம் கூறினார். பசியால் துடித்து வீறிட்டு அழுத குழந்தையின் அழு குரல் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த பிரியங்காவை என்னவோ செய்தது.

வாடகைக் கார் பிடித்து அப்சல்கஞ்ச் காவல் நிலையம் வந்த பிரியங்கா, உடனே அக் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டினார். தகவலறிந்த ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார், தலைமைக் காவலர் ரவீந்திரனின் மனிதநேயத்தைப் பாராட்டினார். குழந்தையின் பெற்றோர் தேடி வரும் வரை அந்தப் பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை பிரியங்காவிடம் ஒப்படைத்தார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதை பலரும் பாராட்டுதல்களுடன் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories