இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்த வைகோ!

Published:

vaiko madurai - 2026

தமிழின துரோகி எனும் அழியாப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ. அவர் மீது படிந்துள்ள கறையை இனி நீக்க முடியாது, நீக்கவே முடியாது!

துவக்க காலத்தில் இலங்கைத் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறி, வியாபாரம் பேசியவர் வைகோ. விடுதலைப் புலிகளின் ஏஜெண்டு என்று கூறி பணபலத்தைப் பெருக்கிக் கொண்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர் நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் ஆதரவாளர்கள்.

இப்போது, விடுதலைப் புலிகள் என்பதோ, இலங்கைத் தமிழர் என்பதோ பணபலத்தைப் பெருக்கும் அம்சம் இல்லை என்பதால், தற்போதைய முதலிட வியாபாரிகளான கிறிஸ்துவ மத வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளார் வைகோ.

இலங்கைத் தமிழரின் இன அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், கிறிஸ்துவ மத போதகர்கள்! உடன், இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் கைகோத்துக் கொண்டு, தமிழினத்தை இலங்கையில் உருத்தெரியாமல் ஆக்கிக் கொண்டிருப்பவர்களுடன் கூட்டணி போட்டுக் கொண்டு, இப்போதும் அதே கதையைப் புனைந்து வருகிறார் வைகோ.

உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அவருக்கு பரிவும் பச்சாதாபமும் அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் இருந்திருந்தால், மத்திய அரசுடன் சுமுகமான சூழலை ஏற்படுத்தி, இலங்கைத் தமிழருக்கு தேவையான வசதிகளை இந்திய அரசின் மூலமே செய்து கொடுக்க தூண்டுதலாக இருக்க இயலும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

ஆனால், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும்; இலங்கைத் தமிழர்கள், அதே தமிழின் அடையாளத்துடன் திகழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில், மத்திய மோடி அரசு செய்து வரும் செயல்களுக்கு பாராட்டாமல் இருப்பதுடன் முட்டுக்கட்டை போட்டு துரோகம் இழைது வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு டிவிட்டர் கருத்து…

வைகோ ஒரு ஊத்த வாயன் இலங்கை தமிழரை பிடித்து தொங்கிய இவனுக்கு தீம்கா வும் காங்கிரஸூம் உத்தமர்கள், இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்த மோடி மோசமானவர்…!! இதுக்கு நாலு தெருவில பிச்சை எடுத்து பிழைக்கலாம் வைகோ

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img