வைகோ.,வை ஓரங்கட்டும் ஸ்டாலின்! திருமாவளவனுக்கு முக்கியத்துவம்!

13 June11 Vaiko - 2026
file copy

திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்று கூறப்படும் நிலையில், திமுக., விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகளை ஒதுக்கக் கூடும் என்றும், சிதம்பரம், புதுவை ஆகியவை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது. சிதம்பரத்தில் திருமாவளவனும், புதுவையில் ரவிக்குமாரும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.

அண்மையில் திருச்சியில் கூட்டிய விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டத்தைக் கண்டு ஸ்டாலின் ஆச்சரியப் பட்டதாகவும், அதற்கு பரிசாக இரு தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் பெறக் கூடும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. அதே நேரம், மதிமுக.,வை ஸ்டாலின் ஓரங்கட்டி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் துரை.முருகன் கூறியதன் வெளிப்பாடாக, தோழமைக் கட்சிகளாகவே மதிமுக.,வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் கருதப் பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் திருச்சி கூட்டத்தில் கலந்துகொண்டார் ஸ்டாலின். இதை அடுத்து, கூட்டணிக்கான இருக்கையை திருமாவளவன் உறுதிப் படுத்தியுள்ளதாக பேச்சு எழுந்தது.

இந்நிலையில், திருமாவளவன் இன்று சிதம்பரத்துக்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்.4-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வேன். அவ்வாறு போட்டியிட்டால் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினார் திருமாவளவன்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

இதனிடையே வைகோ.,வுக்கு இந்தக் கூட்டணியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்றும், அப்படியே கூட்டணியில் சேர்த்தாலும் வைகோ.,வை சீண்டிப் பார்க்கும் விதத்தில் குறைந்தபட்ச தொகுதிகளே மதிமுக.,வுக்கு ஒதுக்கப் படக் கூடும் என்றும் திமுக.,வினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories