December 6, 2025, 3:11 AM
24.9 C
Chennai

‘ராகுல்’ வழியில் காங்கிரஸாரின் ‘டகால்டி’ வேலை! சென்னைவாசிகள் ‘உஷார்’!

vadivelu - 2025

கண்ணை மூடிக் கொண்டு பொய்களை அவிழ்த்து விட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் தனக்கென அரசியலில் ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது போல், காங்கிரஸ் தொண்டர்களும் இப்பொது ‘முயற்சி’ செய்து வருகிறார்கள்!

மக்களுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி அவர்களிடம் இருந்து கிரெடிட் கார்டு தகவல்களைக் கேட்கும் ஏமாற்றுக் காரர்களைப் போல், ஏதோ பின்னாளில் மக்களுக்கு மானியங்கள் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லி, தனிப்பட்ட தாகவல்களைக் கேட்டு வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். அப்படியே, கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையையும் செய்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பாலாஜி நகரில் தனியார் குடியிருப்புப் பகுதியில்தான் இந்தக் கூத்து நடைபெற்று வருகிறது. அங்கே வந்த் இளைஞர்கள் சிலர் பொதுமக்களிடம் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், அவர்களின் ஆதார் அட்டை எண், முகவரி அடையாளச் சான்று, மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று வருகின்றனர். இவற்றை எல்லாம் அந்த இளைஞர்கள் தகவல்களாகக் கேட்ட போது, அங்கிருந்தவர்கள், ஏன் இந்தத் தகவல்களைக் கேட்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள், நாங்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடும். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காகவும், மானியம் உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும் கூறியுள்ளார். அதனால் இப்போதே மக்களிடம் இருந்து இந்தத் தகவல்களைப் பெற்று வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இப்படி எல்லாம் ராகுல் காந்தி எதுவும் அறிவிக்க வில்லையே என்று சிலர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், இது பொதுவில் சொல்லக் கூடிய விஷயமில்லை! கட்சியில் இருப்பவர்களுக்கு மட்டும் தற்போது குறிப்பு அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் ராகுல் காந்தி இதனை பின்னர் வெளிப்படையாக அறிவிப்பார்… என்று கூறியுள்ளனர் அந்த இளைஞர்கள்.

ஆனால் ஏற்கெனவே கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, மொபைல் போன் இவை மூலம் நிதி முறைகேடுகள் அதிகம் நடந்து வரும் நிலையில், பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு மேலும் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமே என்று சிலர் அங்கலாய்த்தனர்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர்களிடம் சிலர் இந்த விவகாரம் குறித்து கவனத்துகுக் கொண்டு சென்றுள்ளனர். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற எந்த அறிவிப்பும் கட்சியின் மேல்மட்டத்தில் இருந்து வரவில்லை என்றனர்.

மேலும், கட்சியில் இப்போது உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு சக்தி அண்ட்ராய்ட் ஆப் உள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பவர்களுக்கு கட்சியில் ஏதாவது பொறுப்பு கிடைக்கும் என்பதால், இளைஞர்கள் சிலர் இவ்வாறு ஈடுபட்டிருக்கலாம். அதற்காக ஒரு பொய்யான காரணத்தைக் கூறி இப்படி செயல்பட்டிருக்கலாம். ஆனால் இது மிகவும் தவறானது. இப்படி யாராவது தனிப்பட்ட தகவல்களை சேகரித்தால் காவல் துறையில் புகார் கொடுங்கள் என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories