‘ராகுல்’ வழியில் காங்கிரஸாரின் ‘டகால்டி’ வேலை! சென்னைவாசிகள் ‘உஷார்’!

vadivelu - 2026

கண்ணை மூடிக் கொண்டு பொய்களை அவிழ்த்து விட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் தனக்கென அரசியலில் ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது போல், காங்கிரஸ் தொண்டர்களும் இப்பொது ‘முயற்சி’ செய்து வருகிறார்கள்!

மக்களுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி அவர்களிடம் இருந்து கிரெடிட் கார்டு தகவல்களைக் கேட்கும் ஏமாற்றுக் காரர்களைப் போல், ஏதோ பின்னாளில் மக்களுக்கு மானியங்கள் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லி, தனிப்பட்ட தாகவல்களைக் கேட்டு வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். அப்படியே, கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையையும் செய்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பாலாஜி நகரில் தனியார் குடியிருப்புப் பகுதியில்தான் இந்தக் கூத்து நடைபெற்று வருகிறது. அங்கே வந்த் இளைஞர்கள் சிலர் பொதுமக்களிடம் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், அவர்களின் ஆதார் அட்டை எண், முகவரி அடையாளச் சான்று, மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று வருகின்றனர். இவற்றை எல்லாம் அந்த இளைஞர்கள் தகவல்களாகக் கேட்ட போது, அங்கிருந்தவர்கள், ஏன் இந்தத் தகவல்களைக் கேட்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

அதற்கு அவர்கள், நாங்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடும். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காகவும், மானியம் உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும் கூறியுள்ளார். அதனால் இப்போதே மக்களிடம் இருந்து இந்தத் தகவல்களைப் பெற்று வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இப்படி எல்லாம் ராகுல் காந்தி எதுவும் அறிவிக்க வில்லையே என்று சிலர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், இது பொதுவில் சொல்லக் கூடிய விஷயமில்லை! கட்சியில் இருப்பவர்களுக்கு மட்டும் தற்போது குறிப்பு அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் ராகுல் காந்தி இதனை பின்னர் வெளிப்படையாக அறிவிப்பார்… என்று கூறியுள்ளனர் அந்த இளைஞர்கள்.

ஆனால் ஏற்கெனவே கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, மொபைல் போன் இவை மூலம் நிதி முறைகேடுகள் அதிகம் நடந்து வரும் நிலையில், பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு மேலும் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமே என்று சிலர் அங்கலாய்த்தனர்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர்களிடம் சிலர் இந்த விவகாரம் குறித்து கவனத்துகுக் கொண்டு சென்றுள்ளனர். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற எந்த அறிவிப்பும் கட்சியின் மேல்மட்டத்தில் இருந்து வரவில்லை என்றனர்.

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

மேலும், கட்சியில் இப்போது உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு சக்தி அண்ட்ராய்ட் ஆப் உள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பவர்களுக்கு கட்சியில் ஏதாவது பொறுப்பு கிடைக்கும் என்பதால், இளைஞர்கள் சிலர் இவ்வாறு ஈடுபட்டிருக்கலாம். அதற்காக ஒரு பொய்யான காரணத்தைக் கூறி இப்படி செயல்பட்டிருக்கலாம். ஆனால் இது மிகவும் தவறானது. இப்படி யாராவது தனிப்பட்ட தகவல்களை சேகரித்தால் காவல் துறையில் புகார் கொடுங்கள் என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories