பயங்கரவாதம் பெருக அரசியல் கட்சிகளும் போலீஸாரும் கொடுக்கும் இடமே காரணம்! விஎச்பி போராட்டத்தில் பேச்சு!

coimbatore vhp protest - 2026

கோவை: கடந்த பிப்.14 அன்று காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பிரிவினைவாத முஸ்லிம்
பயங்கரவாதிகள் நடத்திய கொடூர மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியான 45 சிஆர்பிஎஃப் இந்திய துணை ராணுவப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஞாயிற்றுக் கிழமை இன்று மாலை நடைபெற்றது.

இரங்கல் மற்றும், பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆகியவை, கோவை தெற்க்கு தாலுகாஅலுவலகம் முன்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர்கள் அமர்நாத் சிவலிங்கம், சண்முகம், நாகராஜ் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள்  L.சிவலிங்கம், குனியமுத்தூர் பாபு, கோகுல் ராஜ், விஷ்ணு ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

coimbatore vhp veeravanakkam1 - 2026

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநகர் மாவட்ட செயலாளர் L.சிவலிங்கம் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது நடத்தபட்ட வெடிகுண்டு தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக எந்த பயங்கரவாதியும் இந்தியாவுக்குல் நான்கைந்து தாக்குதல் நடத்துவதில்லை. நம் நாட்டில் இருக்கும் பிரிவினைவாத முஸ்லிம்கள் துணையுடன் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குல் ஊடுருவி இது போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

முதலில் இங்கு உள்ள பிரிவினைவாத முஸ்லிம் பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களைக் களையெடுக்க வேண்டும். மேலும் உளவுத்துறையும், காவல் துறையும்
முஸ்லிம்கள் மீது எந்த விதமான வழக்கு பதிவும் நடவடிக்கையும் எடுக்க தயங்குவதே
பயங்கரவாதிகள் இந்தியாவில் அரசின் சலுகைகளை அனுபவித்து கொண்டு
சுதந்திமாக செயல்பட முக்கிய காரணம்.

1998 யை போல் தங்கள் அசம்பாவித நாசவேலைகள் மூலம் மீண்டும் ஒரு பதட்டமான சூழ்நிலையை கோவையில் ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயல்கின்றனர். காவல் துறையும், உளவுத்துறையும் விழிப்புடன் எச்சரிக்கையாக இல்லாவிடில் நம் நாடு நிச்சயம் முஸ்லிம் பயங்கரவாதிகள் சீரழிந்து போகும் என்றார்.

பின்னர் பேசிய அமர்நாத் சிவலிங்கம், இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை தைரியமாக நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற அவல நிலைக்கு காரணம் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு இங்கு உள்ள அரசியல் கட்சிகள் துணை போவதே காரணம். இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தனது கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து பேசவைத்ததோடு அதை நியாயப்படுத்தியும் பத்திரிகைகளுக்கு
பேட்டி அளித்தார்.

ஆனால் அதற்காக இது வரை தமிழக காவல்துறை சீமான் மீது எந்த விதமான ஓர்
வழக்கு பதிவும் செய்யவில்லை.

coimbatore srathanjali - 2026

இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீதும்
அவர்களுக்கு துணை போகும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மீதும் தேசிய
பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கொடி மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத முஸ்லிம் பயங்கரவாதி யாசின் மாலிக், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் உருவப்படங்களை செருப்பால் அடித்தும், தீயிட்டும் கொளுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories