மாலை 5 மணிக்கு நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் கிரண் பேடி!

kiranbedi2 - 2026

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை முன்னர் இன்று 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி! இந்நிலையில் அவர் ஆளுநர் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்கிறார். மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிரண் பேடி நேரம் ஒதுக்கியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு எதிராக கடந்த 13ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 6-வது நாளாக முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அவரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆளுநர் கிரண்பேடி அழைத்தும், சில நிபந்தனைகளை முதல்வர் நாராயணசாமி விதித்ததால், பேச்சுவார்த்தைக்கு இயலாமல் போனது. இந்நிலையில் நிபந்தனைகளை தளர்த்திக் கொண்டு, மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வருமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகயில் இரவு விருந்தில் பங்கேற்கவும் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories