துப்புரவுப் பணியாளருக்கு மோடி ஏன் பாதபூஜை செய்தார் தெரியுமா?

Modi Pathapooja sweepers - 2026

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று திரிவேணி சங்கமத்தில் பூஜை செய்த மோடி, கங்கையில் ஸ்நானம் செய்து, கும்பமேளா இடத்தை மிகவும் தூய்மையாகப் பராமரித்த இரு பெண்கள் உள்ளிட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்தார். இது பலராலும் பாராட்டப் பட்டது.

ஹிந்துக்கள் எல்லோரும் சகோதரர்கள், ஹிந்து எவரும் தாழ்ந்தவர் ஆகார்! சரி சமானம் எனது லட்சியம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தில்  வளர்ந்தவர் மோடி. பொதுவாக குருவாக இருப்பவர்களுக்கு பாதங்களைக் கழுவி பாதபூஜை செய்தல் மரபு. பண்டைய பாரதத்தில் விருந்தினருக்கு பாத பூஜை செய்து வரவேற்று உபசரித்தல் மரபு. அந்த மரபின் அடிப்படையில், துப்புரவுப் பணியாளரையும் சமூகத்தின் உயர் பிரிவினராகப் போற்றி, அவர்களின் செயல்களுக்கு உயர்ந்த நோக்கம் கற்பித்து இந்த பாத பூஜையை செய்தார் மோடி.

இருப்பினும், அரசியல் ரீதியாக தாக்குதல் மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சியினர், இது தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் ஸ்டண்ட் என்று கூறி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதே நேரம், மோடி ஏன் துப்புரவுப் பணியாளருக்கு பாத பூஜை செய்தார் என்பதற்கு, ஜோதிடர்கள் தங்கள் போக்கில் சில கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு வைரலான கருத்து, ஜோதிட ரீதியாக அலசி ஆராய்ந்து அறிவித்த கருத்து.. இது..!

*** மோடியின் நட்சத்திரம் அனுஷம் ஆகும். இதன் அதிபதி சனியாகும். அவருக்கு ஏழரை சனியின் கடைசி பகுதியான பாத சனி நடக்கிறது. சனியின் பிரதிநிதிகளாக அறியப்படுபவர் துப்புரவு தொழில் செய்பவர்கள் ஆகும்.

கால புருஷ தத்துவத்தில் சனியின் வீடுகள் முறையே மகரம் மற்றும் கும்பம் ஆகும். இதில் கடின உழைப்பாளிகளை குறிக்கும் வீடு மகரம் ஆகும். மகரம் என்பது கர்ம வீடு ஆகும். அங்கே செவ்வாய் உச்சம் மற்றும் சனி ஆட்சி ஆகும். எனவே அந்த வீடு கடின உழைப்பாளிகளான துப்புரவு தொழிலார்களை குறிக்கிறது. அவர்களின் பாதம் என்பது 12 பாவம் ஆகும். ஆதாவது 10 பாவத்தின் 12ம் பாவம் என்பது 9 பாவம் ஆகும். ஒன்பதாம் பாவம் என்பது தர்ம மற்றும் தெய்வ அருளை குறிக்கும்.

மோடிஜி அவர்கள் தனது ஏழரை சனி முடியும் காலத்தில், தர்ம சிந்தனை பெருகவும், கர்ம பலன்கள் குறையவும் இந்த பாத பூஜை செய்கிறார். கர்ம பலனை விரையம் செய்ய தர்மம் உதவும். ஆதாவது மகரத்தில் விரைய பாவம் தனுசு ஆகும். தனுசு என்பது தெய்வ அருள் தரும் குருவின் மூல திரிகோண வீடு ஆகும்.

பாத சனி காலத்தில் மக்கள் சேவை செய்யும் ஊழியர்களின் பாதம் கழுவி பூஜை செய்தல், தெய்வ பலத்தை அதிகரிக்கும்.

சனாதன தர்மம் போதிக்கும் முக்கிய போதனை கர்மத்தை குறைக்க தர்மத்தை பிடி என்பதே. அதை சரியாக பின்பற்றுகிறார் மோடிஜி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories