தனித்துப் போட்டி! தேமுதிக.,வுக்கு திமுக., கொடுத்த ‘டாஸ்க்’!

Vijayakanth STalin - 2026

தேமுதிக., தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் திமுக., அக்கட்சிக்குக் கொடுத்த ‘மறைமுக’ செயல்திட்டம் என்று கூறுகின்றார்கள் தமிழக அரசியல் களத்தில்!

விஜயகாந்த்துக்கு ஒரு யோகம் உண்டு. தேமுதிக.,வினால் வாக்கு வங்கியைக் காட்டி ஒருவரை வெற்றி பெற வைப்பதை விட, வாக்குகளைப் பிரித்து, வெறும் நூறு இருநூறு வாக்குகள் வித்தியாசத்தில் கூட ஒருவரைத் தோல்வியுறச் செய்யலாம் என்பதுதான் அந்த யோகம்!

விஜயகாந்த் தங்கள் கூட்டணியில் இருந்தால் கிடைக்கும் லாபத்தை விட, அதிமுக., கூட்டணியில் இல்லாமல் இருந்தால் கிடைக்கும் லாபம் தங்களுக்கு அதிகம் என்பதை திமுக.,வினர் நன்றாக உணர்ந்துள்ளனர். அதனால், விஜயகாந்த்க்கு ஒரு டாஸ்ட் – வேலை கொடுத்துள்ளனர். அதன்படி, விஜயகாந்த் அதிமுக., கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து நிற்க வேண்டும்! தனித்து நின்று  வாக்குகளைப் பிரித்து அதிமுக.,வை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்பதுதான் !

தேமுதிக., தங்களுடன் கூட்டணி பேசியதை எந்த ஒரு சூழலிலும் ஒரு கட்சி நிச்சயமாக வெளியிடாது. கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். கூட்டணிப் பேச்சு நடக்கிறது என்றெல்லாம் ஒரு நம்பிக்கைக்காகச் சொல்வார்களே தவிர, திமுக.,வின் துரைமுருகன் சொன்னது போல் எவரும் பட்டவர்த்தனமாக இப்படிச் சொன்னதில்லை.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

அதன் மூலம், தேமுதிக.,வுக்கான வாய்ப்புகளை அதிமுக.,வில் குறைக்க வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கமும், கூடவே, இப்போதும் தேமுதிக., எங்களுடன் பேச்சு நடத்துகிறது, நடத்திக் கொண்டிருக்கிறது என்ற தகவலை வெளியுலகுக்குச் சொல்லி அதிமுக.,வில் இருந்தும் தேமுதிக.,வை கழற்றிவிடச் செய்ய  வேண்டும் என்ற நோக்கமும் நன்றாக வெளித்தெரிகிறது.

தேமுதிக.,வில் கூட்டங்களை அதிகம் நடத்த வைத்து, கூட்டணி முடிவை எடுக்க விடாமல் ஒவ்வொரு கருத்துகளாக ஒவ்வொருவரை சொல்ல வைத்ததன் பின்னணியில் திமுக., இருந்தது என்று ரகசியமாகக் கிசுகிசுக்கிறார்கள். எந்த ஒரு கட்சித் தலைவனும் தொண்டர்களிடம் கருத்து கேட்டுவிட்டு, உறுதியான முடிவை தானே எடுப்பார். ஆனால் விஜயகாந்தோ, திமுக.,வுடன் கூட்டணியா.. சரி நீங்களே போயி பேசுங்க என்று கட்சிக் காரர்கள் இருவரை அனுப்பி வைத்துள்ளார். இதனை துரை முருகனும் வெளியில் கூறியுள்ளார்.

இப்போது, துரைமுருகன் ஒன்றுசொல்கிறார், ஸ்டாலின் ஒன்று சொல்கிறார். தேமுதிக.,வுடன் இன்னமும் பேசுகிறோம் என்று துரைமுருகன் சொல்ல… ஸ்டாலினோ திமுக., 20 தொகுதிகளில் போட்டியிடப் போவது உறுதி என்று கூறுகிறார். அவருக்கு, தங்கள் கட்சியினரே எதுவும் விபரீதமான முடிவு எடுத்துவிடக் கூடாது என்ற அச்சம்!

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஒருபுறம் அமமுக., டிடிவி தினகரன் மூலம் அதிமுக., ஓட்டுகளைப் பிரிக்க ஏற்பாடு செய்துவிட்ட திமுக., தரப்பு, தற்போது விஜயகாந்த்தையும் கழற்றிவிட்டு, தனியாக நிற்க வைத்து வாக்குகளைப் பிரிக்க வைக்க திட்டமிடுகிறது. இதன் மூலம் பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக.,வைக் காட்டும் செயல்திட்டம் மக்களிடம் எடுபடவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories