சிக்கிய ‘பணம் காட்டு’ சிறுத்தை! நேற்று உதார்! இன்று உதறல்! திரு ‘மணி’ வளவன்!

thirumavalavan potsymbol - 2026

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை, பணம் கொடுத்துப் பெற வேண்டிய வெற்றி எனக்குத் தேவையுமில்லை என்று நேற்று ஒரு விவாத நிகழ்வில் திருமாவளவன் அறுதியிட்டு, உறுதியிட்டு, அடித்துக் கூறினார்.

இன்று காலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் காரை பெரம்பலூரில் சோதனையிட்டபோது, மிகவும் நூதனமாக கார் கதவுகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்பட்ட இரண்டேகால் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று உதார் விட்டார்.. இன்று உதறல் எடுத்திருக்கிறது திருமாவளவனுக்கு!

வேலூரில் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் 33 கோடி, விடுதலை சிறுத்தைகளிடம் 2 கோடி… என்று பணம் செலவழித்து வெற்றி பெறுபவர்கள் மக்களுக்குச் சேவை செய்வார்கள் என்று நம்பினால் நாம் மூடர்கள்தான்! பண விநியோகத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாவிடில், இத்தேர்தலைப் போல ஜனநாயகப் படுகொலை வேறொன்றில்லை… என்று கொதித்தெழுந்திருக்கிறார்கள் சமூகத் தளங்களில்!  இதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது!

இதற்குக் காரணம் பணம் பிடிபட்ட இடம், சிதம்பரம் தொகுதியில்! போட்டியிடும் வேட்பாளரோ, சனாதனத்தை வேரறுக்கக் கிளம்பிய மாவீரர்! ஆயினும் வோட்டுப் பிச்சை கேட்டு திருவோட்டுப் பானை ஏந்தி நின்றது தில்லை சிதம்பரம் கோயிலில்!

பெரம்பலூர் அருகே பேரளி டோல்வே பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையிலான காவல்துறையை சேர்ந்த குழுவினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இரவு 10 மணி அளவில் திருச்சியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கோடிக்கணக்கில் பணம் கார் கதவுகளில் மறைத்து வைத்து கொண்டு செல்லப் பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அந்த காரினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த காரில், பல்வேறு பகுதியில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட ரூ. 2 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகி தங்கதுரை மற்றும் 2 பேர் திருச்சியிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.

இதை அடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. பின்னர் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும், பணம் பிடிக்கப்பட்ட இடம் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. பிடிபட்ட இடம், சிதம்பரம் தொகுதியில்! போட்டியிடும் வேட்பாளரோ, சனாதனத்தை வேரறுக்கக் கிளம்பிய மாவீரர்! ஆயினும் வோட்டுப் பிச்சை கேட்டு திருவோட்டுப் பானை ஏந்தி நின்றது தில்லை சிதம்பரம் கோயிலில்!

  2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும், பணம் பிடிக்கப்பட்ட இடம் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தது, பண விநியோகத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாவிடில், இத்தேர்தலைப் போல ஜனநாயகப் படுகொலை வேறொன்றுமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories