December 5, 2025, 9:00 PM
26.6 C
Chennai

சிக்கிய ‘பணம் காட்டு’ சிறுத்தை! நேற்று உதார்! இன்று உதறல்! திரு ‘மணி’ வளவன்!

thirumavalavan potsymbol - 2025

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை, பணம் கொடுத்துப் பெற வேண்டிய வெற்றி எனக்குத் தேவையுமில்லை என்று நேற்று ஒரு விவாத நிகழ்வில் திருமாவளவன் அறுதியிட்டு, உறுதியிட்டு, அடித்துக் கூறினார்.

இன்று காலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் காரை பெரம்பலூரில் சோதனையிட்டபோது, மிகவும் நூதனமாக கார் கதவுகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்பட்ட இரண்டேகால் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று உதார் விட்டார்.. இன்று உதறல் எடுத்திருக்கிறது திருமாவளவனுக்கு!

வேலூரில் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் 33 கோடி, விடுதலை சிறுத்தைகளிடம் 2 கோடி… என்று பணம் செலவழித்து வெற்றி பெறுபவர்கள் மக்களுக்குச் சேவை செய்வார்கள் என்று நம்பினால் நாம் மூடர்கள்தான்! பண விநியோகத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாவிடில், இத்தேர்தலைப் போல ஜனநாயகப் படுகொலை வேறொன்றில்லை… என்று கொதித்தெழுந்திருக்கிறார்கள் சமூகத் தளங்களில்!  இதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது!

இதற்குக் காரணம் பணம் பிடிபட்ட இடம், சிதம்பரம் தொகுதியில்! போட்டியிடும் வேட்பாளரோ, சனாதனத்தை வேரறுக்கக் கிளம்பிய மாவீரர்! ஆயினும் வோட்டுப் பிச்சை கேட்டு திருவோட்டுப் பானை ஏந்தி நின்றது தில்லை சிதம்பரம் கோயிலில்!

பெரம்பலூர் அருகே பேரளி டோல்வே பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையிலான காவல்துறையை சேர்ந்த குழுவினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இரவு 10 மணி அளவில் திருச்சியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கோடிக்கணக்கில் பணம் கார் கதவுகளில் மறைத்து வைத்து கொண்டு செல்லப் பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அந்த காரினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த காரில், பல்வேறு பகுதியில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட ரூ. 2 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகி தங்கதுரை மற்றும் 2 பேர் திருச்சியிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.

இதை அடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. பின்னர் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும், பணம் பிடிக்கப்பட்ட இடம் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. பிடிபட்ட இடம், சிதம்பரம் தொகுதியில்! போட்டியிடும் வேட்பாளரோ, சனாதனத்தை வேரறுக்கக் கிளம்பிய மாவீரர்! ஆயினும் வோட்டுப் பிச்சை கேட்டு திருவோட்டுப் பானை ஏந்தி நின்றது தில்லை சிதம்பரம் கோயிலில்!

  2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும், பணம் பிடிக்கப்பட்ட இடம் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தது, பண விநியோகத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாவிடில், இத்தேர்தலைப் போல ஜனநாயகப் படுகொலை வேறொன்றுமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories