December 5, 2025, 6:45 PM
26.7 C
Chennai

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள்?! வைரலான புகைப்படம்! ஆனா என்ன நடந்தது தெரியுமா?

17birth lady horz - 2025

என்னது… ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளா? சமூக வலைதளங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் படம் இந்தச் செய்தியுடன் அதிகமாக வைரலானது!

அந்தப் படத்தில் ஒரு பெண்மணி மிகப் பெரிதாக வீங்கிய வயிற்றுடன் இருப்பது போல் காட்டப்பட்டு, இந்தப் பெண் 17 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற தகவலை கூறி ஒரு பேஸ்புக் தொடர்பையும் கொடுத்திருந்தார்கள்!

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது! மேலும் பெரும்பாலான மக்கள் இந்த படங்களை பகிர்ந்தனர்.

children 17 - 2025ஆனால் இந்தப் படம் ஒரு கேலியும் கிண்டலும் செய்யக்கூடிய கற்பனைச் செய்திகள் கொண்ட இணையதளத்தில் வெளியான ஒரு ரிப்போர்ட்! இது கதை இடைப்பட்ட செய்தியாக உலகச் செய்தி ரிப்போர்ட் என்ற அடிப்படையில் வெளியாகியுள்ளது!

ரிச்சர்ட் கேமரின்டா என்பவர் மே மாதம் 30 ஆம் தேதி தனது முகநூலில் இந்த படத்தை பகிர்ந்திருந்தார். இது 33 ஆயிரம் பேருக்கும் மேலாக ஷேர் செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள்.  மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்கள். இப்படி பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது இந்தச் செய்தி, இவரது பேஸ்புக் பக்கத்தில்!

ஆனால், இது குறித்த செய்தியை வெளியிட்ட  இணையதளம் கதைகள் மற்றும் கற்பனைகளை அதிகம் வெளியிடக்கூடிய இணையதளம் என்பதை அதுவே கூறிக் கொண்டிருக்கிறது! ஆனால் இந்தச் செய்தியைப் பகிர்ந்த பெரும்பாலான மக்கள் அதை உண்மையான செய்தியாகவே நம்பிக் கொண்டு எந்தவித அறிமுகமும் செய்யாமல் தாங்களாகவே பகிர்ந்தார்கள்

அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் புகைப்படம் போட்டோஷாப் முறையில் மாறுதல் செய்யப்பட்டிருந்தது! அதேபோல் 17 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்ட படமும் பழைய ஒரு புகைப்படம் தான்! இந்த புகைப்படங்களுடன் காணப்படும் நபர் ராபர்ட் விட்டார் என்ற அமெரிக்காவின் (gynecologist) மகளிர் நோய் மருத்துவ நிபுணர்!

17birth lady - 2025இந்தச் செய்தியும் கூட, முன்னர் ஜன.24, 2016ல் வேறு ஒரு இணையதளத்தில் இதே புகைப்படங்களுடன் கேள்வி எழுப்பிய வண்ணம் செய்தியாக வெளியானது குறிப்பிடத் தக்கது. மீண்டும் மீண்டும் வாட்ஸ் அப் சுற்றில் வலம் வருவது போல், இந்தச் செய்தி வந்து பரபரப்பைக் கிளப்பியது.

children 17a - 2025குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில், தாங்கள் பார்த்ததை உடனே பகிர்வது பலருக்கும் கைவந்த கலை. அதன் உண்மைத் தன்மையோ,  பின்னணியோ, உள்ளிருக்கும் வார்த்தைகளையோ, செய்தியையோ, அதன் உள்நோக்கத்தையோ, விளம்பரத்தையோ எதையும் கவனிக்காமல் அப்படியே பகிர்வதுதான் பெரும்பாலானவர்களின் பழக்கம்.

fake news - 2025

அதனை இந்தச் செய்தியும் எடுத்துக் காட்டி, எதையும் தாங்கள் நம்பிக் கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வரும்முன், அப்படியே அடுத்தவருக்கு அதைத் தள்ளிவிடும் கிசுகிசு பேர்வழிகள்தான் நாம் என்பதை உணர்த்தக் கூடிய வகையில் இந்தச் செய்தியை அந்த இணையதளம் வெளியிட்டது.

இப்படிப்பட்ட செய்திகளையும் நம்பிக்கொண்டு எத்தனை பேர் அதைப் பகிர்ந்திருக்கிறார்கள் என்பது தான், இந்தக் கேலியின் உள்நோக்கம்!

1 COMMENT

  1. எதைத்தான் நம்புவது, பரப்புவது என்ற விவஸ்தையே இல்லது poivittathu.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories