முகநூலில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு ! அபராதத்தின் எதிரொலி!

Published:

fb - 2026
பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாப்பதில் கோளாறுகள்  ஏற்பட்டுள்ளது.  இதனால் , அந்த சமூக வலைதளம் மீது, 35 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிப்பது என, அமெரிக்க பெடரல் வர்த்தக கமிஷன், நேற்று முடிவு செய்துள்ளது.

உலக நாடுகளில் சமூக வலைத்தள பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்து இருப்பது ‘பேஸ்புக்’. ஆனால் இதன் உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின் போது திருடப்பட்டு உள்ளன. இந்த திருட்டில் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2018 ல் நடந்த இந்த தகவல் திருட்டை பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காது என உறுதி அளித்தார். எனினும், இந்த ஊழல் விவகாரத்தால் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீத அளவுக்கு சரிவை சந்தித்தது.அதாவது 6.5 லட்சம் வீழ்ச்சி.

ALSO READ:  FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

மேலும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6½ லட்சம் கோடி) வீழ்ச்சி அடைந்தது.இதையடுத்து ‘பேஸ்புக்’ நிறுவனம், உபயோகிப்பாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கைக்கு பின்னர் ‘பேஸ்புக்’ தகவல்கள் மேலாண்மை எளிதாகும்; அமைப்பு மெனு மறுவடிவமைப்பு செய்யப்படும்; உபயோகிப்பாளர்கள் தங்கள் தகவல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது .

புதிய ‘பிரைவேசி ஷார்ட்கட்ஸ் மெனு’ ஒன்றை ‘பேஸ்புக்’ அறிமுகம் செய்யும். இதைக்கொண்டு, உபயோகிப்பாளர்கள் தங்கள் ‘பேஸ்புக்’ பக்கத்தின் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள முடியும்; அவர்களது தகவல்களை யார், யார் பார்க்கிறார்கள், செயல்களை யார், யார் காண்கிறார்கள் என்பதை கண்டு நிர்வகிக்க முடியும். அத்துடன் அவர்கள் பார்க்கிற விளம்பரங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று ‘பேஸ்புக்’ கூறியது.

அமெரிக்க பெடரல் வர்த்தக கமிஷன், நேற்று பேஸ் புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. ஏற்கனவே, கூகுள் நிறுவனத்திற்கு கடந்த 2012 ல், 22 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு அதிகமான தொகை அபராதம் விதிக்கப்பட்டது தற்போது தான் என்கின்றனர்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

Related articles

Recent articles

spot_img