கொள்ளையனை மூதாட்டி செருப்பாலடித்த வீரத்தை டிவிட்டி … அஜித், விஜய் ரசிகர்களை தூண்டிலிட்ட ஹர்பஜன்!

nellai robbery - 2026

கொல்ல வந்த கொள்ளையர் அரிவாளுடன் மிரட்டிய போதும் அவர்களை அடித்துத் துரத்திய முதிய தம்பதியின் வீரம் இப்போது சமூகத் தளங்களில் பலராலும் கொண்டாடப் படுகிறது. இது துணிச்சலான செயல் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். அதை இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்க்ஸின் செல்லப் பிள்ளையுமான ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பதிவில் பாராட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்ற முதியவரின் தோட்ட வீட்டில் இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் இருவர் புகுந்தனர். சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, அவர் பின்புறம் வந்த கொள்ளையன் ஓசைப்படாமல் மெள்ள வந்து கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, அவரை நிலைகுலையச் செய்து, கீழே தள்ள முயன்றான்.

ஆனால், அவனிடம் இருந்து தப்பிக்கப் போராடிய சண்முகவேல் எழுப்பிய சத்தம் கேட்டு வீட்டுக்கு உள் இருந்து வந்த அவரது மனைவி செந்தாமரை கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து எறிந்து, கொள்ளையர்களை திணறடித்தார். இதனால் கொள்ளையன் பிடியில் இருந்து சண்முகவேல் தப்பினார். பின் தம்பதி இருவரும் சேர்ந்து நாற்காலி, ஸ்டூல் என கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து எறிந்து கொள்ளையரை விரட்டினர்.

இந்தக் காட்சிகள் அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அவை இன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனால் இந்த முதிய தம்பதி இன்று பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இந்நிலையில், கொள்ளையர்கள் விரட்டப்பட்ட காட்சிகளை டிவிட்டரில் பகிர்ந்து பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்…

அதே போல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனக்கே உரிய பாணியில் தமிழில் அசத்தலாக டிவிட்டியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவுக்கு சுவாரஸ்யமாக பதில் கொடுத்துள்ளனர் பலர்.

ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை.
Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers’’ என பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories