சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

44. நாட்டு நலனே முக்கியம்!

செய்யுள்:

த்வேஷ்யோ பி சம்மத: சிஷ்டஸ்தஸ்யார்தஸ்ய யதௌஷதம் |
த்யாஜ்யோ துஷ்ட: ப்ரியோப்ராசீதங்குளீவோரகக்ஷதா ||

— ரகுவம்சம்.

பொருள்:

உடல்நலம் சரியாவதற்காக  கசப்பான மருந்தானாலும் எப்படி உட்கொள்ளுவோமோ அதேபோல் எதிரி ஆனாலும் நல்ல குணம் உள்ளவனானால் அவனை ஆதரிக்க வேண்டும். அதேபோல் நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை விலக்கி விடவேண்டும்.

விளக்கம்:

மகாகவி காளிதாசர் ரகுவம்சத்தில் திலீப சக்கரவர்த்தியின் குணநலன்களை விவரிக்கையில் கூறிய சுலோகம் இது.

நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நற்குணம், நிபுணத்துவம் கொண்டவர்கள் அனைவரையும் ஆதரிக்க வேண்டும். நாட்டு நலனுக்கு கேடு விளைவிப்பவர் நண்பன் ஆனாலும் தண்டிக்க வேண்டும் என்பது கருத்து.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

உவமான அணி கொண்டு தன் தனித்துவத்தைக் காட்டும் காளிதாசரின் கவிதை இன்பத்தை இந்த ஸ்லோகத்தில் அனுபவிக்கலாம்.

சமுதாய நலனும் நாட்டு நலனும் முக்கியமானவை. அதற்கு பின்னர்தான் நண்பனும் பகைவனும். அனைவரையும் ஒன்று சேர்த்துச் செல்லும் திறன் தலைமைப் பண்புகளில் ஒன்று. நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம், திறமை உள்ளவர்களை சேர்த்துக் கொள்வது சிறந்த தலைவர்களின் இயல்பு.

சாணக்கியர் தன் சாமர்த்தியத்தால் சந்திர குப்தனை சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்வித்தார். பின்னர், பகைவனோடு சேர்ந்து அப்போது வரை சாணக்கியருக்குப்  பிரச்சனையாக இருந்த நந்த அரசர்களின் முதலமைச்சரான ராட்சச மந்திரியை சந்திரகுப்தனுக்கு முதலமைச்சராக நியமித்தார். நண்பனாக இல்லாவிட்டாலும் அந்த மனிதரின் சாமர்த்தியம் நாட்டுக்குப் பயன்படும் என்பதால் அவ்விதம் செய்தார்.

பிவி நரசிம்மராவு பிரதமராக இருந்த போது ஐநா சபையில் காஷ்மீர் குறித்து இந்தியாவின் குரலை ஒலிக்கச் செய்வதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேயியை நியமித்தார். அச்செயல் இருவருக்கும் புகழ் சேர்ப்பதாக இருந்தது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories