December 6, 2025, 3:15 PM
29.4 C
Chennai

நீர் நிலைகள் தூர்வாரும் பணி ! இளைஞர்களின் சுயமுயற்சி ! குவியும் ஆதரவு !

thurvaruthal - 2025புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம், கீரமங்கலம் பகுதியில்,  இளைஞர்கள் தன்னெழுச்சியுடன், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்கினர்.

இளைஞர்கள் நற்பணி மன்றத்தைத் தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டி தொடர்ந்து, 2 மாதமாக நீர் நிலைகளைத் தூர்வாரி வருகின்றனர். இவர்களின் முயற்சியால், அம்புலி ஆற்றில் வரத்து வாய்க்கால்கள், 3-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் முற்றிலும் தூர்வாரப்பட்டுள்ளன.

தொடர்ந்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூர்வாரும் பணியில் ஈடுபடும் இளைஞர்களின் முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த மாதம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி தான் பிள்ளைகளுக்காகச் சேமித்து வைத்திருந்த ரூ.10,000 பணத்தை, நீர் நிலைகள் பாதுகாப்புக்காக இளைஞர்களிடம் கொடுத்து அவர்களை நெகிழ்ச்சியடைய செய்தார்.

சிறுவர்களும் கூட  தாங்கள் வைத்திருந்த உண்டியல் பணத்தைக் கொடுத்தனர். இப்படி, நீர் நிலைகள் தூர்வாரும் பணி தொய்வில்லாமல், நடக்க வெளி நாடு வாழ் இளைஞர்கள் தேவையான நிதி உதவி செய்து வருகின்றனர். மேலும், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலரும் தங்களால் முயன்ற உதவியைச் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.kothamankalam - 2025கொத்தமங்கலத்தில் பாலமுருகன் – கார்த்திகா என்பவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தத்திருமணத்துக்கு கொத்தமங்கலத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர் சென்றிருந்தனர்.திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதி இளைஞர்களை மேடைக்கு அழைத்து தாங்கள் கையில் வைத்திருந்த ரூ.6,000 ரொக்கப் பணத்தை நீர் நிலைகள் பாதுகாப்புக்காக வழங்கினர்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத இளைஞர்கள் நிதியைப் பெற்றுக் கொண்டு, மணமக்களுக்குத் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வுகளைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி, பாராட்டியும் சென்றனர். இப்படி, இந்தப் பகுதிகளில் உள்ள ஒவ்வொருவரும் தானாகவே முன்வந்து தங்களால் முயன்ற நிதியைக் கொடுப்பதால் பணி 2 மாதங்களைக் கடந்தும் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.

1 COMMENT

  1. நல்ல முயற்சி. பாராட்டுக்கள். அருகில் உள்ளோர் இயன்றதை கொடுங்கள். தொலைவில் உள்ளோர் ஆசி கூறுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories