காஞ்சி அத்திவரதர் இன்றைய தரிசனம்!

athivarathr1 horz - 2026

விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தரிசனம் அருளும் அத்திவரதர் பெருமாள் இன்னும் இரு நாட்களில் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளப் போகிறார்.

ஜூலை 1ம் தேதி தொடங்கி கடந்த 45 நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதர் பெருமானை தரிசனம் செய்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் நாளே வந்திருந்து தரிசனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

அத்திவரதர் பெருமானே, முற்காலத்தில் ஆழ்வார்களாலும், ஆசார்யப் பெருமக்களாலும் போற்றி வணங்கப் பட்ட பெருமாள். அவரே வரம் தரும் வரதராசன் என்றும், பேசும் பெருமாள் என்றும் போற்றப் படுபவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வைணவம் வளர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜரின் குருவாக இருந்த திருக்கச்சி நம்பிகள், இந்தப் பெருமானுக்குத்தான் ஆலவட்டில் எனும் விசிறி வீசும் கைங்கரியம் செய்து வந்தார் என்றும், அவருடன் இந்தப் பெருமாள் உரையாடுவார் என்றும், இவர் மூலமே ராமானுஜருக்கு புகழ்பெற்ற ஆறுவார்த்தைகளை திருக்கச்சி நம்பிகள் கேட்டுப் பெற்று அறிவித்தார் என்றும் கூறுவர்.

பின்னாளில் ஏதோ காரணங்களால் அனந்தசரஸ் திருக்குளத்துள் எழுந்தருளிய பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளச் செய்து, 48 நாட்கள் ஒரு மண்டலம் அலங்காரம் செய்து தரிசிக்கும் வழக்கம் வந்துள்ளது. இருப்பினும், இந்தப் பெருமாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜைகளோ, வேறு ஆகம பூஜைகளோ கிடையாது. மூலவராக வீற்றிருக்கும் வரதராசருக்கு நிவேதனம் ஆகும் போது, இவருக்கும் நிவேதனம் செய்விக்கப் படுகிறது.

தினந்தோறும் விதவித அலங்காரங்களைச் செய்து, பக்தர்களின் தரிசனத்துக்காக  அத்திவரதர் இங்கே எழுந்தருளியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் அருளும்  அத்தி வரதரின் இன்றைய 45 ஆம் நாள் (14.08.19) அலங்காரத்தை இங்கே தரிசியுங்கள்…

athivarathar aug14 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories