காஞ்சி அத்திவரதர் இன்றைய தரிசனம்!

athivarathr1 horz - 2026

விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தரிசனம் அருளும் அத்திவரதர் பெருமாள் இன்னும் இரு நாட்களில் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளப் போகிறார்.

ஜூலை 1ம் தேதி தொடங்கி கடந்த 45 நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதர் பெருமானை தரிசனம் செய்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் நாளே வந்திருந்து தரிசனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

அத்திவரதர் பெருமானே, முற்காலத்தில் ஆழ்வார்களாலும், ஆசார்யப் பெருமக்களாலும் போற்றி வணங்கப் பட்ட பெருமாள். அவரே வரம் தரும் வரதராசன் என்றும், பேசும் பெருமாள் என்றும் போற்றப் படுபவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வைணவம் வளர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜரின் குருவாக இருந்த திருக்கச்சி நம்பிகள், இந்தப் பெருமானுக்குத்தான் ஆலவட்டில் எனும் விசிறி வீசும் கைங்கரியம் செய்து வந்தார் என்றும், அவருடன் இந்தப் பெருமாள் உரையாடுவார் என்றும், இவர் மூலமே ராமானுஜருக்கு புகழ்பெற்ற ஆறுவார்த்தைகளை திருக்கச்சி நம்பிகள் கேட்டுப் பெற்று அறிவித்தார் என்றும் கூறுவர்.

பின்னாளில் ஏதோ காரணங்களால் அனந்தசரஸ் திருக்குளத்துள் எழுந்தருளிய பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளச் செய்து, 48 நாட்கள் ஒரு மண்டலம் அலங்காரம் செய்து தரிசிக்கும் வழக்கம் வந்துள்ளது. இருப்பினும், இந்தப் பெருமாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜைகளோ, வேறு ஆகம பூஜைகளோ கிடையாது. மூலவராக வீற்றிருக்கும் வரதராசருக்கு நிவேதனம் ஆகும் போது, இவருக்கும் நிவேதனம் செய்விக்கப் படுகிறது.

தினந்தோறும் விதவித அலங்காரங்களைச் செய்து, பக்தர்களின் தரிசனத்துக்காக  அத்திவரதர் இங்கே எழுந்தருளியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் அருளும்  அத்தி வரதரின் இன்றைய 45 ஆம் நாள் (14.08.19) அலங்காரத்தை இங்கே தரிசியுங்கள்…

athivarathar aug14 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories