காஞ்சி அத்திவரதர் இன்றைய தரிசனம்!

Published:

athivarathr1 horz - 2026

விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தரிசனம் அருளும் அத்திவரதர் பெருமாள் இன்னும் இரு நாட்களில் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளப் போகிறார்.

ஜூலை 1ம் தேதி தொடங்கி கடந்த 45 நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதர் பெருமானை தரிசனம் செய்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் நாளே வந்திருந்து தரிசனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

அத்திவரதர் பெருமானே, முற்காலத்தில் ஆழ்வார்களாலும், ஆசார்யப் பெருமக்களாலும் போற்றி வணங்கப் பட்ட பெருமாள். அவரே வரம் தரும் வரதராசன் என்றும், பேசும் பெருமாள் என்றும் போற்றப் படுபவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வைணவம் வளர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜரின் குருவாக இருந்த திருக்கச்சி நம்பிகள், இந்தப் பெருமானுக்குத்தான் ஆலவட்டில் எனும் விசிறி வீசும் கைங்கரியம் செய்து வந்தார் என்றும், அவருடன் இந்தப் பெருமாள் உரையாடுவார் என்றும், இவர் மூலமே ராமானுஜருக்கு புகழ்பெற்ற ஆறுவார்த்தைகளை திருக்கச்சி நம்பிகள் கேட்டுப் பெற்று அறிவித்தார் என்றும் கூறுவர்.

பின்னாளில் ஏதோ காரணங்களால் அனந்தசரஸ் திருக்குளத்துள் எழுந்தருளிய பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளச் செய்து, 48 நாட்கள் ஒரு மண்டலம் அலங்காரம் செய்து தரிசிக்கும் வழக்கம் வந்துள்ளது. இருப்பினும், இந்தப் பெருமாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜைகளோ, வேறு ஆகம பூஜைகளோ கிடையாது. மூலவராக வீற்றிருக்கும் வரதராசருக்கு நிவேதனம் ஆகும் போது, இவருக்கும் நிவேதனம் செய்விக்கப் படுகிறது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தினந்தோறும் விதவித அலங்காரங்களைச் செய்து, பக்தர்களின் தரிசனத்துக்காக  அத்திவரதர் இங்கே எழுந்தருளியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் அருளும்  அத்தி வரதரின் இன்றைய 45 ஆம் நாள் (14.08.19) அலங்காரத்தை இங்கே தரிசியுங்கள்…

athivarathar aug14 - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img