February 21, 2026, 7:11 PM
29 C
Chennai

“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.. ஆனா, நான்…

“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்..ஆனா, நான்……..” -பெரியவா ஒரு லம்பாடியைப்பற்றி தொண்டர்களிடம்

( “…..எமன்…இல்லே!…எமனுக்கு எமன் – கால காலன்!” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.)

( காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா? அல்லது அமிர்தக் கனியா? )

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.67932536 2317821985200294 4705699326368677888 n - 2026

ஹூசூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் ஆலயத்தில் பெரியவா தங்கி இருந்தார்கள்

கோயிலுக்கு வெளீயே ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவள் புருஷனுக்குக் கடுமையான காய்ச்சல்,வாந்தி,பேதி…அவனைத்தான் ,அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள்.

பெரியவா கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.

வண்டியில் படுத்திருந்த தன் புருஷனை ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள். இரு கைகளையும் கூப்பிக்கொண்டு காரே-பூரே என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்

பெரியவா உடனிருந்த தொண்டர்களீடம் சொன்னார்கள்….

இந்த லம்பாடிக்கு எவ்வளவு பதிபக்தி பாரு.ஒரு ஆண்பிள்ளையை – புருஷனை – தான் ஒன்றியாகவே தூக்கிக் கொண்டு வந்திருக்காளே!
பகவான், இவளுக்கு அவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கான்.

சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்..ஆனா, நான்……..” என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெளிவாக ஊகிக்க முடிந்தது.

“…..எமன்…இல்லே!…எமனுக்கு எமன் – கால காலன்!” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.

பெரியவா மிக்க கனிவுடன் ஒரு ஆரஞ்சுக் கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.

மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும், அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள் தரிசனத்துக்கு.

முந்தைய தினம் பார்த்தபோது,அந்தப் புருஷன் பிழைப்பானா என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் இன்றைக்கோ, உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கிறான் அவன்!

லம்பாடிப் பெண்ணின் கண்களில் ஏராளமான நன்றிப் பெருக்கு. “தேவுடு…தேவுடு..” என்று சொல்லிச் சொல்லி விழுந்து விழுந்து வணங்கினாள்..

காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா? அல்லது அமிர்தக் கனியா?

லம்பாடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories