“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக” -பெரியவா

“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக” -பெரியவா

(மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம். பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம். “சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது. துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம் மனுஷ லட்சணம்).

கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(46)
தட்டச்சு-வரகூரான் நாராயணன். 26056052 1817618858283271 3930286687593664750 n 1 - 2026

பெரியவா பண்டரிபுரத்தில் தங்கி இருந்த சமயத்துல அந்த இடத்திற்கு அருகிலேயே சந்திரபாகா என்னும் நதி ஓடிக் கொண்டிருந்தது.நமக்கு காவேரி போல பண்டரிபுரத்துக்கு சந்திரபாகா நதி விளங்குகிறது. இதில் சில சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நதிகளில் வெள்ளம் பெருகலாம். அது ஊருக்குள் புகுந்து நாசம் ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.

அன்று பெரியவர் தங்கி இருந்த கோசாலைக்குள்ளேயும் வெள்ளம் புகுந்து விட்டது. படிப்படியாக அது உயர்ந்து கொண்டும் சென்றது. எல்லாரும் அச்சப்பட தொடங்கி விட்டனர்.  நிச்சயம் அழிவு நேரப்போகிறது என்றும் கருதினர். பெரியவா முன்னால் எல்லாரும் பரிதாபமாக நின்றனர்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 13 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பெரியவர் சிரித்தார்,

“மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம். பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம்… அப்படித்தானே?” என்று கேட்டார்

. எல்லாரிடமும் மவுனம்
.
“நாம எப்படி இருக்கோம்கிறதைதான் இந்த வெள்ளம் சொல்றது. நாம் ஒண்ணு வருத்தப்படுறோம் .இல்லைன்னா ரொம்ப சந்தோஷமா ஒரே கூத்தும் பாட்டுமா இருக்கோம்.நிதானமா அளவா நாம நடந்துக்கிறதேயில்லை.அதைத்தான் இயற்கை ரூபத்துல இந்த மழை சொல்றது” என்ற பெரியவரை எல்லாரும் மவுனமாக வெறித்தனர்.

மழை வெள்ளத்தை வைத்து மனித மனதோடு அதை தொடர்புபடுத்தி பெரியவர் ஒரு பக்கம் உபதேசம் செய்த போதிலும் அவர் கைகள் இரண்டும் வெள்ள நீரை தள்ளிவிட்டபடியே, ‘போயிடு…போயிடு’ என்றன அவ்வப்போது.

சில மணிநேரங்களில் வெள்ளம் வடிந்து சந்திரபாகா நதி அமைதியாக ஓடத் தொடங்கியது.

பெரியவரும்,”இது என் பேச்சை கேட்டுடுத்து….

நீங்களும் கேட்கணும்.
“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது. துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம் மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும். சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன் பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும். கஷ்டப்படுத்தாது”
என்ன ஒரு அரிய உபதேசம்! இதை அவர் வார்த்தைகளால் மட்டும் கூறவில்லை. வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக அவரே முன் உதாரணமாக திகழ்ந்து கொண்டு கூறினார். –அதுதான் பெரியவரின் பெரும் சிறப்பு.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories