December 6, 2025, 4:47 AM
24.9 C
Chennai

மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உத்ஸவம் தொடக்கம்!

bhudathazhwar mamallapuram - 2025

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் இன்று தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பன்னிரு ஆழ்வார்களில், முதல் ஆழ்வார்கள் மூவர் என்று போற்றப்படும் பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய மூவரில், நடுவிலுள்ள ஆழ்வார் பூதத்தாழ்வார். மூவரும் முறையே ஐப்படி மாதம் திருவோணம், அவிட்டம், சதயம் என வரிசையாக மூன்று நட்சத்திரங்களிலும் அவதரித்தவர்கள்.

பூதத்தாழ்வார், மாமல்லபுரம் நந்தவன தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். இவர், மாமல்லை தலசயனப் பெருமாள் கோவிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

இந்தக் கோவிலில் இவரது அவதார உத்ஸவம் இன்று தொடங்குகிறது. மாலை 3 மணிக்கு பூதத்தாழ்வார் தலசயனப் பெருமாள் நில மங்கை தாயார் தேவிகள் ஆகியோருடன் சிறப்பு திருமஞ்சனம், பின்னர் நாலாயிர திவ்யப் பிரபந்த சேவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூதத்தாழ்வார் திருவீதி உலா வருகிறார். பிறகு கோவிலுக்கு திரும்பி இரவு 7.30க்கு சாற்றுமுறை நடைபெறுகிறது.

bhudathazhwar - 2025

இவ்வாறு, வரும் நவம்பர் 5 ஆம் தேதி வரை இந்த உத்ஸவம் தினந்தோறும் நடைபெறுகிறது. பூதத்தாழ்வார் அவதார உத்ஸவத்தின் ஒன்பதாம் நாள் உத்ஸவமாக நவம்பர் 4 ஆம் தேதி ஆழ்வார் திருத் தேரில் வீதியுலா வருகிறார்! பூதத்தாழ்வார் அவதார உத்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து நிலமங்கைத் தாயார் சமேத தலசயனப் பெருமாள், பூதத்தாழ்வாரை தரிசித்து அருள் பெறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories