ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நாளை முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

Published:

srirangam paramapathavasal2 - 2026

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நாளை முகூர்த்தக்கால் நடப்படுகிறது

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது! இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நாளை ஆயிரங்கால் மண்டபம் அருகில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது

டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை 4.45க்கு வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த உத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்!

நிகழ்ச்சி நிரல்படி…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்… வருகிற 06.11.2019 புதன்கிழமை காலை 10 .00 மணிக்கு வைகுந்த ஏகாதேசி முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

வருகிற 25.12.2019 அன்று திருநெடுந்தாண்டகமும்,
26.12.2019 முதல் 05.01.2020 வரை பகல் பத்து திருவிழாவும்,
முக்கிய திருவிழாக்களான மோகினி அலங்காரம் 05.01.2020 அன்றும்,
06.01.2020 அன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறப்பும்,
12.01.2020 அன்று திருக்கைத்தல சேவையும்,
13.01.2020 வேடுபரி வைபவமும்
15.01.2020 அன்று ஸ்ரீநம்பெருமாள் தீர்த்தவாரியும் 16.01.2020 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இதை முன்னிட்டு வருகிற 06.11.2019 அன்று வைகுந்த ஏகாதேசி பெருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் வைபவம் காலை 10.00 – 11.00 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெறும்…என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img