spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நாம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்! சித்தர்கள் சிந்தனை!

நாம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்! சித்தர்கள் சிந்தனை!

- Advertisement -
sitharkal

சித்தர்கள் கூறும் இரகசியங்கள்

1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் ) வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்.

2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்.

3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்.

4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றி கொள்ளவேண்டும்.

5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம்.

6) கண்கள் மனதின் வாசல், நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும், கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை இதை தான் எரிச்சல் என்பார்கள் கண் திருஷ்டி என்பதும் இதுவேன, திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள்.

7) நாம் உறங்கும் பொழுது எண்ணம் அமைதியடையும். இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது.

8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சூடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குள்ளே வைக்கும். இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம்.

9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும். உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்.

1O) அதனால் புத்தகம் படித்து கொண்டோ மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது.

11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி…

12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன் தாயிடம் ஆசி பெற செல்கிறான். எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம், நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள்.

12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள்.

14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன், பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது.

15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான்.

16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்து இருக்கிறாள்.

17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார்.

18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது பார்த்து உண்ண வேண்டும்.

19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம்கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்கு தான் வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிட வேண்டும் என்பதும் இதற்கு தான் மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும்.

21) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது. வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது.

22) பசிக்காமல் உண்பது நேரம் தவறி உண்பது, அடிக்கடி இறைச்சி உணவு உண்பது, துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது.

23)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல்.

24) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும்.

25) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும் பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும், சித்தர்களும் சொல்லுவார்கள், இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை.

26) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும் மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெறிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள்.

27) அதன் படி உணவு முறைகளான இவைகளை நக்கி சாப்பிடுவது, சப்பி சாப்பிடுவது கடித்து சாப்பிடுவது உறிந்து சாப்பிடுவது என்று 4 வகையாக பிரிக்கலாம். எந்த உணவை எப்படி சாப்பிடலாம் என்று முறை இருக்கிறது.

28) சித்தர்கள் சொல்வது உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும். பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள்.

29) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல், மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும். சர்க்கரை நோய் வராது.

30) உள்ளங்கையில் நீர் ஊற்றி உறிந்தால் பல அற்புதங்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

31) கைகளை பற்றி சில விவரங்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

32) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சாப்பிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம்.

33) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும். இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது. மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை என்று சொல்கிறது.

இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்ல குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும் என்று சொல்கிறார்.

மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர், கோரக்கர் உள்ளங்கைகளில் தான் தேன் ஊற்றி அதில் மருந்துகளை குழைத்து உண்ண சொல்லி உள்ளார்கள் நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள். கைகளை வைத்து நோய்களை அறியலாம்.

நகம், விரலில் உள்ள மச்சம், அதில் உள்ள இடைவெளி போன்ற அடையாளங்களை வைத்து நோய்களை அறியலாம்…

மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் மூலம் அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை, கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை, இதை மகான்கள், சித்தர்கள், தூதுவர்கள் செய்தார்கள்….

கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன்….

நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம்.

இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது. நம்முடைய உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சூடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது. இந்த சூடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்கு ஈரம் தேவை.

(குளிர்ச்சி தேவை ) இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்ன ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சூடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடையே நீர் அருந்தகூடாது.

தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நனையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது. சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது.

உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும். ஆகவே கால்களை மடக்கி கைகளில் நீர் ஊற்றி ஏதாவது இறைவன் நாமம் சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe