உருவ வழிபாடு ஏன்? ஆச்சாரியாள் பதில்!

abinav vidhya theerthar 1 - 2026

வெளிநாட்டவர்: இந்துக்கள் பல தெய்வங்களை பூஜிப்பது உண்டா?

ஆச்சாரியாள்: அனைத்து படைப்பின் ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய வற்றிற்கு காரணமான உருவமற்ற ஒரே இறைவன் தான் இருக்கிறான் என்று நாம் கருதுகிறோம். ஆனால் இந்த இறைவன் தன்னுடைய பக்தர்களை அறிவதற்காக பலவிதமான உருவங்களை பெற்றுக் கொள்கிறான். எந்த பெயருடனும் உருவத்துடனும் மக்கள் இறைவனை விரும்புகிறார்களோ அவ்வகையில் அவர்கள் அவனை ஆராதிக்கிறார்கள். இந்திரன் போன்ற பெயர்களை நீங்கள் கேட்டிருக்கலாம். இவைகள் புண்ணியம் செய்த ஜீவன் வெவ்வேறு சமயங்களில் அடையும் பதவிகள். முன்பு கூறப்பட்ட இறைவனுடன் இது போன்ற பதவிகளையும் சேர்த்து நாம் குழப்பக்கூடாது.

வெளிநாட்டவர்: சிலைகளை பூஜிப்பது பற்றி ஆச்சார்யாள் சற்றுக் கூறுவார்களா?

ஆச்சாரியாள்: நாம் வெறும் கற்களை பூஜிப்பது இல்லை. வெறும் கல்லை நாம் பூஜிப்பதாக இருந்தால் உருவத்தைப் பார்த்து கல்லே என்று கூறுவோம். இறைவா என்று இல்லை. மூர்த்திகளில் இறைவன் இருக்கிறான் என்று கருதி மூர்த்திகளை நம் ஆராதனைக்குத் துணையாக வைத்துக்கொண்டு இறைவனை பூஜிக்கிறோம். மூர்த்திகளை பிரதிஷ்டை செய்வதற்காக செய்யும் கும்பாபிஷேகத்தில் பூஜை செய்பவர்களின் சிரத்தையாலும் தவத்தாலும் சில மூர்த்திகளின் விசேஷத்தால் கோவில்களில் இருக்கும் மூர்த்திகளில் விசேஷமாக தெய்வ ஸாந்நித்யம் ஏற்படுகிறது. இறைவன் உருவமற்றவன் ஆனாலும் தன் கருணையால் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்கு சக்தி உள்ளவனாகவும் இருக்கிறான். அவ்வாறு செய்யவும் செய்கிறான்.

வெளிநாட்டவர்:
பூஜை செய்யும் போது நீர் பால் போன்றவைகளை ஊற்றுவதை பார்த்தேன் அதன் தாத்பரியம் என்ன?

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 1 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

ஆச்சார்யாள்: பூஜை செய்யும் போது இறைவனை நாம் ஸேவிக்கிறோம். நீங்கள் கண்ட அபிஷேகம் மூலமாக நாம் இறைவனை குளிப்பாட்டுகிறோம். அதற்குப் பிறகு அவனைத் துடைக்கிறோம். பிறகு அவனை உணவு அருந்த செய்கிறோம். அளவற்ற உருவமற்ற இறைவனுக்கு எதுவும் தேவைப்படாவிட்டாலும் நம் பக்தி நாம் அவனை மூர்த்தி கண்டு பூஜிக்கும்படிச் செய்கிறது. உங்களுக்குப் பழக்கம் உள்ள ஒப்புமை கூற வேண்டுமானால் அபிஷேகம் என்பது இறைவனுக்கு நாம் கொடுக்கும் ஷவர் பாத்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories