சகமனிதர்களுடன் அணுகுமுறை: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

அடுத்த உபதேசம், விமத்ஸர: என்பதாகும். அதாவது, வயிற்றெரிச்சல் படாமல் இருப்பது யாராவது நம்மைவிடப் படித்தவனோ பணக்காரனோ தென்பட்டால் முதலில் நமக்கு வருவது வயிற்றெரிச்சல்தான்,

“அவன் என்ன அவ்வளவு படித்தவனா? என்னிடம் வரட்டும், பார்க்கிறேன்” என்று தோன்றுகிறது. நம்மைவிடப் படித்தவன் இருந்தால் நமக்கு என்ன? நாமும் அந்த யோக்யதையைச் சம்பாதிக்க முயற்சி பண்ணலாமே.

அசூயைப்பட்டதால் மட்டும் நம்முடைய படிப்பு அதிகமாகாது. அவன் படிப்பும் குறைந்து விடாது.
நம்முடைய சந்தோஷத்தையும் பாராட்டையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமே தவிர, நம்முடைய கீழ்த்தரமான மனதை மற்றவர்களுக்குப் பிரகடனம் செய்வதினால் எந்தவிதமான லாபமும் கிடையாது.

யோகஸூத்ரத்தில் பின்வரும் ஸூத்ரம் ஒன்று வருகிறது.
மைத்ரீ-கருணா-முதிதோபேக்ஷாணாம்
ஸுகதுக்கபுண்யாபுண்யவிஷயாணாம்
பாவனாதச்சித்தப்ரஸாதனம்

ஒருவன் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தால் அவனோடு சிநேக பாவத்துடனிருங்கள்; பொறாமைப்படாதீர்கள், அவனிடம், “ரொம்ப சந்தோஷம், நீங்கள் மேலும் மேலும் முன்னுக்கு வர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்” என்று சொல்லுங்கள்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஒருவன் கஷ்டத்தில் இருந்தால், “அவனுக்கு இந்தக் கஷ்டம் வேண்டும், நன்றாக அனுபவிக்கட்டும்” என்று நினைக்காதீர்கள்; அவனுக்கு, தயை காட்டுங்கள். ஏனென்றால், நமக்கும் ஒரு சமயம் கஷ்டம் வரும். அப்போது நமக்கும் இன்னொருவரின் உதவி தேவைப்படும்.

நாம் இன்று ஒருவனுக்கு உதவினால்தான் நாளை நமக்கு மற்றவர்கள் உதவுவார்கள். ஆகவே மற்றவர்கள் கஷ்டப்படும்போது உதவ வேண்டும். அடுத்தவனுடைய கஷ்டத்தை நீக்க நம்மால் முடிந்தால் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி நம்மால் முடியாது போனால், நாம் பகவானிடம் சென்று, “இவனுடைய கஷ்டத்தை தீர்த்துவிடுங்கள்” என்ற பிரார்த்தனையையாவது செய்ய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories