நாய்க்காக பரியும் எஜமானன்! தாயாக பரியும் எம்பெருமான்!

perumal 1 - 2026

திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற மகான் சேங்கனூரில் இருந்தார். அவ்வூர்க்கருகிலிருந்த திருக்கண்ணமங்கை கோயிலில் உள்ள பக்தவத்சலம் பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற
பெயர் வந்தது. .

கோவில் புஷ்ப கைங்கர்யம் செய்வது, கோவிலையே சுத்தப்படுத்தி, பகவானிடம் சரணாகதி செய்து வாழ்ந்து வந்தார் .
ஒரு சமயம் ‘ சரணாகதி செய்பவரை பகவான் காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது’ என்று சந்தேகம் கொண்ட ஒருவர் இவரை அணுகி அக்கேள்வியை கேட்டார் . இவர் அவரை சாஸ்திரத்தை நம்பாதவன் என புரிந்து கொண்டார்.

சாஸ்திரதை நம்பாத ஜனங்களிடம் பொதுவாக உலகில் நடக்கும் விஷயங்களை காட்டி புரிய வைக்கலாம் . மற்றவர்களுக்கு ஹிதோபதேசம் செய்து ஆசார்யர்கள் நல்வழி படுத்துவார்கள்.

அப்போது எதிர் வீட்டிலிருப்பவன் தான் வளர்க்கும் நாயைப் பிடித்து கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தான். அன்று அதே தெருவில் வசிக்கும் மற்றொரு நாய் வேகமாக ஓடி வந்து எதிர் வீட்டு நாயைப் பார்த்து ‘லொள் லொள்’ என ஹிம்சை பண்ணியது .

யாருடனோ பேசிக் கொண்டிருந்த அந்நாயின் எஜமானன் தன் நாய் படும் ஹிம்சையை காணப் பொறுக்காமல், குபீர் எனப் பாய்ந்து தன் நாயை தாக்க வந்த நாயை கல்லால் அடித்து தன் நாயை அணைத்தபடி சென்றான்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 21 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணமங்கை ஆண்டான் தன்னிடம் விதண்டாவாதம் செய்தவரை பார்த்து , ‘ இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் இவ்வளவு அபிமானம்? இவர்கள் என்ன உறவினரா? அல்லது ரத்த சம்பந்த உறவா’ என்று கேட்டார்.

இது அவன் சொந்த நாய் . அதனால் அவனுக்கு அபிமானம் ‘ என்றார் அடுத்தவர். சொந்த நாயாக இது ஆவதற்கு காரணமென்ன’ என்று கண்ணமங்கை ஆண்டான் கேட்க

இந்த நாய் அவன் வீட்டில் இருக்கிறது. அவன் தரும் உணவை உண்டு அவன் காலையே சுற்றி சுற்றி வருகிறது . இந்த அன்பு அந்த எஜமானன் நாயாக இருந்தாலும் தன் சொந்தம் என நினைக்க வைக்கிறது. அதை காப்பது தன் பொறுப்பு என நினைக்கிறான் ‘ என்றார் விதண்டாவாதம் செய்தவர்.

தனக்கு பிரியமான நாயை மற்றொரு நாய் ஹிம்சை செய்தால் அதைக் காப்பாற்றுவது ஒரு மனிதனுக்கு ஸ்வபாவமாக இருந்தால் பக்தனுக்கு திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படி செய்யமாட்டாரா?

நீயே கதி என்று பரந்தாமன் திருவடியிலேயே கிடக்கும் அடியவர்களை அணைத்துக் கொள்ளாமல் இருந்து விடுவாரா? உலக விஷயங்களில் திருப்ப நினைப்பவர்கள். தன்னடியார்களோடு சேர்த்து விடாமல் விலக்கி அணைத்து கொண்டு காப்பாற்ற மாட்டாரா எம்பெருமான்?

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

சரணாகதி சத்தியமாக எஜமான் காப்பாற்றுவான் என்று உலக வாழ்க்கையிலே தெரியும்போது, கருணையே வடிவான எம்பெருமான் சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவார் என்ற சந்தேகம் ஒருவருக்கு எழும்பலாமா “?

தம்மை பரந்தமானிடம் சரணாகதி செய்தவர்களுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே லட்சியம். அது ஒன்றே சரணாகதி செய்தவன் தன் எஜமானன் எம்பெருமானுக்கு செய்ய வேண்டியது” என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் ஹித உபதேசம் உலக விஷயத்தை வைத்தே விளக்கிச் சொல்ல வல்லவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories