கர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

அனுஷ்டான வ்யஸனத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். எவ்வளவுதான் ஆத்ம தத்துவத்தைப் பற்றியும் வேதாந்த சாஸ்திரத்தைப் பற்றியும் சொன்னாலும், மீண்டும் மீண்டும் கர்மாக்களைச் செய்து கொண்டேயிருப்பது. “அனுஷ்டான வ்யஸனம்” எனப்படும்.

கர்மாக்களைச் சரிவர செய்ய வேண்டும் என்றுதான் பகவத்பாதாளும் சொல்கிறார். ஆனால், எதுவரை கர்மாக்களைச் செய்ய வேண்டும் என்ற இடத்தில்தான் அவருக்கும் மீமாம்ஸக மதத்தை அனுசரிப்பவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

மீமாம்ஸகர்களைப் பொருத்த வரையில் கர்மாக்களை வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டும். பகவத்பாதாளின் கண்ணோட்டத்தில் அவற்றை ஓரளவிற்குச் செய்ய வேண்டும். பிறகு,
த்ருடதரம் கர்மஸு ஸந்த்யஜ்யதாம்
என்றவாறு இருந்துவிடலாம்.

ஆனால், அனுஷ்டான வ்யஸனம் இருப்பவர்களுக்கு கர்மாக்களை வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டும் என்றுதான் தோன்றும்.

இப்போது ஒரு கேள்வி கேட்கலாம். “கர்மாவைச் செய்வது தவறு என்கிறீர்களே! அப்படியென்றால் ஸந்தியாவந்தனம் செய்வதும் தவறு தானே! ஸந்தியாவந்தனம் செய்யக் கூடாது என்கிறீர்களா?” இவ்வாறு யாராவது கேட்டால், இக்கேள்விகளுக்குப் பதில் கூற நான் தயாராக இல்லை.

ஏனென்றால், இத்தகைய கேள்விகளைச் சோம்பேறிகள்தான் கேட்பார்கள். ஆத்யாத்மிகமான இலட்சியத்தைச் சாதிக்க வேண்டிய மனிதன் சாதாரணப் பலன் தரும் சாதாரணமான அனுஷ்டானத்தைச் செய்வதிலேயே காலம் கழிப்பது சரியில்லை என்றுதான் நான் கூறுகிறேன்.

அனுஷ்டான வ்யஸனம் உள்ளவனுக்கு என்ன தொந்தரவு என்றால், அது அவனுக்கு மறு பிறவியைத் தர ஏதுவாகும். செய்த கர்மாவிற்கு பலன் வராமலிருக்க முடியாது. பலனை அனுபவிப்பதற்கு சரீரம் வந்துதானாக வேண்டும். ஆகவேதான் அனுஷ்டான வ்யஸனம் ஒரு பந்தகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories