02-06-2023 2:39 PM
More

    AI as my Member of Parliament

    Sare Jahan Se Accha

    Shut up. Shall We?

    To Read in other Bharatiya languages…

    சபரிமலை கோயில் பிப் 12-மாசிமாத பூஜைக்காக நடை திறப்பு..

    உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் பிப் 12ல் மாசிமாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பிப்13முதல்பிப்17வரை ஐந்து நாட்கள் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.பக்தர்கள் சபரிமலை செல்ல ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்து செல்லமுடியும்.இன்றுமுதல் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.

    மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார்.ஐயப்பனின் தவகோலம் களைந்து நெய் ஆழியில் தீபமேற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    வேறு பூஜைகள் ஏதுமின்றி இரவு நடை அடைக்கப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் துவங்கி நடைபெற உள்ளன.வருகிற 17-ந் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.நிலக்கல்லில் தற்காலிக உடனடி முன்பதிவு இருக்கும்.பத்தனம்திட்டா செங்கன்னூர் திருவனந்தபுரத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    14 + fourteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,023FansLike
    389FollowersFollow
    84FollowersFollow
    0FollowersFollow
    4,766FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-