December 6, 2025, 11:31 AM
26.8 C
Chennai

பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்

Resizer 15446190103101 - 2025

திருப்பதி: பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள் திருப்பதி மலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.

பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார்.

எனவே, பத்மாவதி தாயார் அவதரித்த பத்ம சரோவரம் திருக்குளத்தில் அவருடைய அவதார நாள் அன்று புனித நீராடுவது மிகவும் விசேஷமாகும்.

எனவேதான் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் பஞ்சமி தினமான இன்று பத்மசரோவரம் திருக்குளத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் அவருடைய அவதார திருநாளை முன்னிட்டு கணவனின் அன்பளிப்பாக பட்டு சேலை, மஞ்சள், குங்குமம் ஆகியவை உள்ளிட்ட மங்கல பொருட்கள் இன்று காலை திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏழுமலையானின் அன்பளிப்புகளாக திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஏழுமலையான் திருவடியில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்ட பின் யானை மீது ஏற்றப்பட்டு மங்கல பொருட்களை தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள் ஆகியோர் அவற்றை மச்சான் திருச்சானூருக்கு கொண்டு சென்றனர்.
மங்கலப்பொருட்கள் திருச்சானூரை அடைந்தவுடன் அவை பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும்.

பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பஞ்சமி தீர்த்த உற்சவம் பத்மசரோவரம் திருக்குளத்தில் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories