December 6, 2025, 10:31 AM
26.8 C
Chennai

திருப்பதி திருமலையில் ஊடல் உத்ஸவம்… பக்தர்கள் பரவசம்!

thirupathi utsav - 2025

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்திய, வாராந்திர மாதாந்திர, வருடாந்திர உற்சவங்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

அவற்றில் நித்திய உற்சவமான கல்யாண உற்சவம், வருடாந்திர உற்சவமான பிரம்மோற்ஸவம் ஆகியவற்றிற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் வருடாந்திர உற்சவங்களில் ஊடல் உற்சவமும் குறிப்பிடத்தக்க தக்க ஒன்று. ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஊடல் உற்சவம் இன்று மாலை கோவில் திரு மாடவீதிகளில் ஒன்றான கிழக்கு மாட வீதியில் நடைபெற்றது.

ஊடல் உற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையானின் உற்சவரான மலையப்பசுவாமி தன்னுடைய தேவியர்களான ஸ்ரீதேவி,பூதேவி ஆகியோர் மீது ஊடல் கொண்டு கோவிலில் இருந்து தனியாக புறப்பட்டு மாட வீதிகள் வழியாக வலம் சென்றார்.

தங்களுடைய தலைவனை காணாத தேவியர்களான ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக இடம் சென்று கிழக்கு மாடவீதியில் தங்களுடைய தலைவனை வழிமறித்தனர்.

அப்போது மலையப்ப சுவாமியை ஒருபுறமும், உபய நாச்சியார்களை அவருக்கு எதிர் புறத்திலும் எழுந்தருள செய்த கோவில் அர்ச்சகர்கள் இறை மூர்த்தங்கள் சார்பாக எதிர் எதிர் திசையில் நின்று மலர் பந்துகளை இறை மூர்த்திகளை நோக்கி வீசி எறிந்தனர்.

இறைவன், இறைவிகள் ஆகியோர் சார்பில் அர்ச்சகர்கள் வீசி எறிந்த மலர் பந்துகளை பிடிக்க பக்தர்களிடையே பெரும் போட்டி ஏற்பட்டது. நிறைவாக வேத மந்திரங்கள், திவ்ய பிரபந்தம் ஆகிவற்றின் சாட்சியாக ஊடல் தணிந்த உற்சவமூர்த்திகள் கோவிலை சென்றடைந்தனர்.

சாதாரண மனிதர்களின் குடும்ப வாழ்க்கை, காதல் வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்படும் ஊடல்கள், அதனை தொடர்ந்து நடைபெறும் சமாதானம் ஆகிவற்றை குறிப்பிடும் வகையில் நடைபெற்ற ஏழுமலையானின் ஊடல் உற்சவம் பக்தர்களின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories