திருப்பதி திருமலையில் ஊடல் உத்ஸவம்… பக்தர்கள் பரவசம்!

thirupathi utsav - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்திய, வாராந்திர மாதாந்திர, வருடாந்திர உற்சவங்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

அவற்றில் நித்திய உற்சவமான கல்யாண உற்சவம், வருடாந்திர உற்சவமான பிரம்மோற்ஸவம் ஆகியவற்றிற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் வருடாந்திர உற்சவங்களில் ஊடல் உற்சவமும் குறிப்பிடத்தக்க தக்க ஒன்று. ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஊடல் உற்சவம் இன்று மாலை கோவில் திரு மாடவீதிகளில் ஒன்றான கிழக்கு மாட வீதியில் நடைபெற்றது.

ஊடல் உற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையானின் உற்சவரான மலையப்பசுவாமி தன்னுடைய தேவியர்களான ஸ்ரீதேவி,பூதேவி ஆகியோர் மீது ஊடல் கொண்டு கோவிலில் இருந்து தனியாக புறப்பட்டு மாட வீதிகள் வழியாக வலம் சென்றார்.

தங்களுடைய தலைவனை காணாத தேவியர்களான ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக இடம் சென்று கிழக்கு மாடவீதியில் தங்களுடைய தலைவனை வழிமறித்தனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

அப்போது மலையப்ப சுவாமியை ஒருபுறமும், உபய நாச்சியார்களை அவருக்கு எதிர் புறத்திலும் எழுந்தருள செய்த கோவில் அர்ச்சகர்கள் இறை மூர்த்தங்கள் சார்பாக எதிர் எதிர் திசையில் நின்று மலர் பந்துகளை இறை மூர்த்திகளை நோக்கி வீசி எறிந்தனர்.

இறைவன், இறைவிகள் ஆகியோர் சார்பில் அர்ச்சகர்கள் வீசி எறிந்த மலர் பந்துகளை பிடிக்க பக்தர்களிடையே பெரும் போட்டி ஏற்பட்டது. நிறைவாக வேத மந்திரங்கள், திவ்ய பிரபந்தம் ஆகிவற்றின் சாட்சியாக ஊடல் தணிந்த உற்சவமூர்த்திகள் கோவிலை சென்றடைந்தனர்.

சாதாரண மனிதர்களின் குடும்ப வாழ்க்கை, காதல் வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்படும் ஊடல்கள், அதனை தொடர்ந்து நடைபெறும் சமாதானம் ஆகிவற்றை குறிப்பிடும் வகையில் நடைபெற்ற ஏழுமலையானின் ஊடல் உற்சவம் பக்தர்களின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories